எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்
எவ்வளவு இருக்கிறாய்
எடுத்துக் கொள்ளவோ
இழந்து போகவோ
போதுமா
இந்த ஒரு பொழுது
இந்த ஒரு வாழ்க்கை?
About
- pras
- VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
- We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!
Friday, February 18, 2011
அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன் manusiyaputhiran
அங்கே ஒரு கடவுள் பிறந்தார்
அங்கே ஒரு அரசர்
தனது கடவுளுக்கு ஆலயம் எழுப்பினார்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பு
அரசர்கள் வருவதற்கு முன்பு
அங்கே யார் இருந்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது
நான் உள்ளுணர்விலிருந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
நம்பிக்கைகளிருந்தல்ல
நம்பிக்கையின்மைகளிலிருந்து
இந்த வரிகளைத் தொடங்குகிறேன்
இதன் அடுத்த வரியைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது
அங்கே ஒரு கோயில் இருந்தது
அங்கே ஒரு மசூதி இருந்தது
கோயில்களும் மசூதிகளும்
எழுப்பப்படுவதற்கு முன்னர்
அவை அழிக்கப்படுவதற்குமுன்னர்
அங்கே ஒரு காலம் இருந்தது
பிறகு அது அழிக்கப்பட்டது
நான் எனது வரலாற்றுப் புத்தகங்களை
எரித்துவிடுகிறேன்
நீங்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில்
காறித் துப்புங்கள்
நாம் அவற்றை இனி
ஒருபோதும் பயன்படுத்த முடியாது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றி
சொன்னதுதான் இதற்கும்:
அது ஒரு மூடனால் சொல்லப்பட்ட
புனைகதை
சத்தமும் சினமும் நிறைந்த
அற்பமான புனைகதை
அகழ்வாராய்ச்சிகள்
முக்கியமான தடயங்களைத் தருகின்றன
அவை வரலாறுகளை மாற்றி எழுதுகின்றன
புதிய வரலாறுகளை எழுதுகின்றன
தீர்ப்புகளை எழுதுகின்றன
ஆனால் அதில் ஒரு முக்கியமான
தடயம் மறைக்கப்பட்டுவிட்டது
அது நம் அனைவரையும் மனம்
உடையச் செய்வது
நான் அந்தத் தடயத்தை
இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
இன்னும் உங்களுக்கு
ஒரு இதயம் இருக்கிறது
ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது
இப்போது அங்கே என்ன இருக்கிறது?
இடிபாடுகள் இருக்கின்றன
வெற்றிடம் இருக்கிறது
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
கடந்து செல்லும்
பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன
நீதிபதிகள் நம்பிக்கைகளின் பேரால்
தீர்ப்புகள் வழங்குகிறார்கள்
நீதியின் பெயரால் வழங்கப்படும்
நீதியைவிட
நம்பிக்கையின் பெயரால் வழங்கப்படும்
நீதி நமக்குப் பரிச்சயமானது
நாம் புரிந்துகொள்ளக் கூடியது
நமது அரசர்கள்
நம்பிக்கையின் பெயரால்
நாடுகளை வென்றார்கள்
நம்பிக்கையின் பெயரால்
வெல்லப்பட்டவர்களை
கழுமரங்களில் சொருகிவைத்தார்கள்
மைதானங்களை
சிரத்சேதம் செய்யப்பட்ட தலைகள்
இமைப்பதைப் பார்த்தபடி
தமது நம்பிக்கைகளை உறுதி செய்தார்கள்
ஔரங்கசீப்போ
சத்ரபதி சிவாஜியோ
நம்பிக்கையற்றவர்களாக இருந்திருந்தால்
இவ்வளவு புனித யுத்தங்களை
நாம் பார்த்திருக்க மாட்டோம்
காந்தி ஒரு நம்பிக்கையற்றவராக
இருந்திருந்தால்
இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட
ஒரு விடுதலையை அளித்திருக்க மாட்டார்
ஒரு நீதிபதியை வழிநடத்துவது போல
நம்பிக்கை ஒவ்வொரு மனிதனையும்
இப்போது வழிநடத்துகிறது
அந்த இளைஞனுக்கு என்ன தெரியும்
இஸ்லாத்தின் தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவேயில்லை
ஐந்து நேரமும் தொழுகிறான்
ஒரு சிறிய வேலைக்குப் போகிறான்
அவனது சகோதரிகள் அவனை நம்புகிறார்கள்
ஒரு நாள் காணாமல் போகிறான்
அவனது புகைப்படம்
பத்திரிகைகளில் வெளிவருகிறது
அவன் நம்பிக்கையின் பெயரால்
பிறந்த நாள் விருந்திற்குக் கூடியவர்களைக்
கொலை செய்கிறான்
அந்த சன்னியாசிக்கு என்ன தெரியும்
இந்து தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவே இல்லை
கிடைத்ததை உண்டு
கிடைத்த இடத்தில் தூங்கி
கங்கையில் குளித்து எழுகிறான்
வாளை உயர்த்தி
சூரியனை நோக்கி சந்தியா வந்தனம்
செய்தபடி
நம்பிக்கையின் பெயரால்
யாரோ ஒருத்தியின் வயிற்றைக் கிழிக்கிறான்
எவ்வளவு கொன்றாலும்
ஜனங்கள் மிச்சம் இருக்கிறார்கள்
கூட்டம் கூட்டமாக எல்லா இடத்திலும்
பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்
மனித அழிவு நமக்கு
எந்த அதிர்ச்சியையும் தருவதில்லை
இது ஒரு அலுப்பூட்டும் வேலை
ஏராளமான மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள்
ஏராளமான கோயில்களுடன்
ஏராளமான மசூதிகளுடன்
ஏராளமான நம்பிக்கைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
நம்புங்கள்
நான் ஒரு மத சார்பற்றவன்
நான் நடு நிலையாகவே
கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்
எல்லாத் தரப்பு நியாயங்களையும்
நான் பேசுகிறேன்
நான் அந்த நாடகத்தை ஆடியே தீரவேண்டும்
இந்துவாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
இஸ்லாமியனாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
மத சார்பற்றவனாக இருப்பதும்
ஒரு தேர்வு அல்ல
கடவுள்
அங்கே பிறப்பதற்கு முன்பு
நிறைய மனிதர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள்
கடவுள்களின் ஆலயங்கள்
அங்கே எழுப்பப்படுவதற்கு முன்பு
அது வேட்டைப் பொருள்களைப்
பங்கிட்டுக் கொள்ளும் நிலமாக இருந்தது
அது ரத்த வாடையாலும்
மாமசத்தின் மிச்சங்களாலும் நிறைந்திருந்தது
கருணையின் கடவுள்
தவறான ஒரு இடத்தில் வந்து பிறந்தார்
கருணையே வடிவான இறைவனுக்கு
ஒரு அரசன் தவறான இடத்தில்
ஒரு ஆலயம் எழுப்பினான்
இப்போதும் அந்த இடம்
வேட்டைப் பொருள்களின் பங்கிடும்
நிலமாக இருக்கிறது
யாரெல்லாம் எதையெல்லாம்
வேட்டையாடினீர்கள்
என்று உங்களுக்குத் தெரியும்
ஒருவர்கூட அதை
பயத்தாலோ
வெட்கத்தாலோ
குற்ற உணர்வாலோ
மறைக்க முயற்சி செய்யவில்லை
நீங்கள் நம்பிக்கையின்
பெயரால் வேட்டையாடினீர்கள்
நீங்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டீர்கள்
நம்பிக்கை என்பதே
எப்போதும் இன்னொருவர்மீதான
தண்டனையாக இருக்கும்போது92ங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
மறுமை நாளில்கூட
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
கொஞ்சம்
சமாதான முயற்சிகளில் பங்கெடுங்கள்
கொஞ்சம்
தேர்தல் அறிக்கைகளைத் தாமதியுங்கள்
அது பங்கிடப்படுகிறது
நம்பிக்கையின் தராசில்
உங்கள் வேட்டைப் பொருள் நிறுக்கப்படுகிறது
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
மேல் முறையீடுகளுக்கு நேரமிருக்கிறது
இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள்
கொலைகளுக்கு
இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது
கொல்லப்படுவதற்கு
இன்னும் எவ்வளவோ
ஜனங்கள் இருக்கிறார்கள்
அது பங்கிடப்படுகிறது.
thanks uyirmmai
அங்கே ஒரு அரசர்
தனது கடவுளுக்கு ஆலயம் எழுப்பினார்
கடவுள்கள் பிறப்பதற்கு முன்பு
அரசர்கள் வருவதற்கு முன்பு
அங்கே யார் இருந்தார்கள்
என்பது நமக்குத் தெரியாது
நான் உள்ளுணர்விலிருந்து
இந்தக் கவிதையை எழுதுகிறேன்
நம்பிக்கைகளிருந்தல்ல
நம்பிக்கையின்மைகளிலிருந்து
இந்த வரிகளைத் தொடங்குகிறேன்
இதன் அடுத்த வரியைப் பற்றி
எனக்கு எதுவும் தெரியாது
அங்கே ஒரு கோயில் இருந்தது
அங்கே ஒரு மசூதி இருந்தது
கோயில்களும் மசூதிகளும்
எழுப்பப்படுவதற்கு முன்னர்
அவை அழிக்கப்படுவதற்குமுன்னர்
அங்கே ஒரு காலம் இருந்தது
பிறகு அது அழிக்கப்பட்டது
நான் எனது வரலாற்றுப் புத்தகங்களை
எரித்துவிடுகிறேன்
நீங்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில்
காறித் துப்புங்கள்
நாம் அவற்றை இனி
ஒருபோதும் பயன்படுத்த முடியாது.
ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றி
சொன்னதுதான் இதற்கும்:
அது ஒரு மூடனால் சொல்லப்பட்ட
புனைகதை
சத்தமும் சினமும் நிறைந்த
அற்பமான புனைகதை
அகழ்வாராய்ச்சிகள்
முக்கியமான தடயங்களைத் தருகின்றன
அவை வரலாறுகளை மாற்றி எழுதுகின்றன
புதிய வரலாறுகளை எழுதுகின்றன
தீர்ப்புகளை எழுதுகின்றன
ஆனால் அதில் ஒரு முக்கியமான
தடயம் மறைக்கப்பட்டுவிட்டது
அது நம் அனைவரையும் மனம்
உடையச் செய்வது
நான் அந்தத் தடயத்தை
இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
இன்னும் உங்களுக்கு
ஒரு இதயம் இருக்கிறது
ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது
இப்போது அங்கே என்ன இருக்கிறது?
இடிபாடுகள் இருக்கின்றன
வெற்றிடம் இருக்கிறது
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
கடந்து செல்லும்
பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன
நீதிபதிகள் நம்பிக்கைகளின் பேரால்
தீர்ப்புகள் வழங்குகிறார்கள்
நீதியின் பெயரால் வழங்கப்படும்
நீதியைவிட
நம்பிக்கையின் பெயரால் வழங்கப்படும்
நீதி நமக்குப் பரிச்சயமானது
நாம் புரிந்துகொள்ளக் கூடியது
நமது அரசர்கள்
நம்பிக்கையின் பெயரால்
நாடுகளை வென்றார்கள்
நம்பிக்கையின் பெயரால்
வெல்லப்பட்டவர்களை
கழுமரங்களில் சொருகிவைத்தார்கள்
மைதானங்களை
சிரத்சேதம் செய்யப்பட்ட தலைகள்
இமைப்பதைப் பார்த்தபடி
தமது நம்பிக்கைகளை உறுதி செய்தார்கள்
ஔரங்கசீப்போ
சத்ரபதி சிவாஜியோ
நம்பிக்கையற்றவர்களாக இருந்திருந்தால்
இவ்வளவு புனித யுத்தங்களை
நாம் பார்த்திருக்க மாட்டோம்
காந்தி ஒரு நம்பிக்கையற்றவராக
இருந்திருந்தால்
இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட
ஒரு விடுதலையை அளித்திருக்க மாட்டார்
ஒரு நீதிபதியை வழிநடத்துவது போல
நம்பிக்கை ஒவ்வொரு மனிதனையும்
இப்போது வழிநடத்துகிறது
அந்த இளைஞனுக்கு என்ன தெரியும்
இஸ்லாத்தின் தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவேயில்லை
ஐந்து நேரமும் தொழுகிறான்
ஒரு சிறிய வேலைக்குப் போகிறான்
அவனது சகோதரிகள் அவனை நம்புகிறார்கள்
ஒரு நாள் காணாமல் போகிறான்
அவனது புகைப்படம்
பத்திரிகைகளில் வெளிவருகிறது
அவன் நம்பிக்கையின் பெயரால்
பிறந்த நாள் விருந்திற்குக் கூடியவர்களைக்
கொலை செய்கிறான்
அந்த சன்னியாசிக்கு என்ன தெரியும்
இந்து தர்மம் பற்றி
அவன் எதையும் கற்கவே இல்லை
கிடைத்ததை உண்டு
கிடைத்த இடத்தில் தூங்கி
கங்கையில் குளித்து எழுகிறான்
வாளை உயர்த்தி
சூரியனை நோக்கி சந்தியா வந்தனம்
செய்தபடி
நம்பிக்கையின் பெயரால்
யாரோ ஒருத்தியின் வயிற்றைக் கிழிக்கிறான்
எவ்வளவு கொன்றாலும்
ஜனங்கள் மிச்சம் இருக்கிறார்கள்
கூட்டம் கூட்டமாக எல்லா இடத்திலும்
பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்
மனித அழிவு நமக்கு
எந்த அதிர்ச்சியையும் தருவதில்லை
இது ஒரு அலுப்பூட்டும் வேலை
ஏராளமான மனிதர்கள் மிச்சமிருக்கிறார்கள்
ஏராளமான கோயில்களுடன்
ஏராளமான மசூதிகளுடன்
ஏராளமான நம்பிக்கைகள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
நம்புங்கள்
நான் ஒரு மத சார்பற்றவன்
நான் நடு நிலையாகவே
கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்
எல்லாத் தரப்பு நியாயங்களையும்
நான் பேசுகிறேன்
நான் அந்த நாடகத்தை ஆடியே தீரவேண்டும்
இந்துவாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
இஸ்லாமியனாக இருப்பது ஒரு தேர்வு அல்ல
மத சார்பற்றவனாக இருப்பதும்
ஒரு தேர்வு அல்ல
கடவுள்
அங்கே பிறப்பதற்கு முன்பு
நிறைய மனிதர்கள் அங்கே பிறந்திருக்கிறார்கள்
கடவுள்களின் ஆலயங்கள்
அங்கே எழுப்பப்படுவதற்கு முன்பு
அது வேட்டைப் பொருள்களைப்
பங்கிட்டுக் கொள்ளும் நிலமாக இருந்தது
அது ரத்த வாடையாலும்
மாமசத்தின் மிச்சங்களாலும் நிறைந்திருந்தது
கருணையின் கடவுள்
தவறான ஒரு இடத்தில் வந்து பிறந்தார்
கருணையே வடிவான இறைவனுக்கு
ஒரு அரசன் தவறான இடத்தில்
ஒரு ஆலயம் எழுப்பினான்
இப்போதும் அந்த இடம்
வேட்டைப் பொருள்களின் பங்கிடும்
நிலமாக இருக்கிறது
யாரெல்லாம் எதையெல்லாம்
வேட்டையாடினீர்கள்
என்று உங்களுக்குத் தெரியும்
ஒருவர்கூட அதை
பயத்தாலோ
வெட்கத்தாலோ
குற்ற உணர்வாலோ
மறைக்க முயற்சி செய்யவில்லை
நீங்கள் நம்பிக்கையின்
பெயரால் வேட்டையாடினீர்கள்
நீங்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டீர்கள்
நம்பிக்கை என்பதே
எப்போதும் இன்னொருவர்மீதான
தண்டனையாக இருக்கும்போது92ங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
மறுமை நாளில்கூட
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
கொஞ்சம்
சமாதான முயற்சிகளில் பங்கெடுங்கள்
கொஞ்சம்
தேர்தல் அறிக்கைகளைத் தாமதியுங்கள்
அது பங்கிடப்படுகிறது
நம்பிக்கையின் தராசில்
உங்கள் வேட்டைப் பொருள் நிறுக்கப்படுகிறது
கொஞ்சம்
அமைதியாக இருங்கள்
மேல் முறையீடுகளுக்கு நேரமிருக்கிறது
இன்னும் நீதிபதிகள் இருக்கிறார்கள்
கொலைகளுக்கு
இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது
கொல்லப்படுவதற்கு
இன்னும் எவ்வளவோ
ஜனங்கள் இருக்கிறார்கள்
அது பங்கிடப்படுகிறது.
thanks uyirmmai
Saturday, October 23, 2010
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
மன்னிப்பு என்பது
மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று
படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று
தண்டனையை
ஒத்தி வைப்பது என்று
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று
மறதியின்
இன்னொரு பெயர் என்று
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
என்று
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று
=
வியூகத்திற்குள் இருக்கும்போது
வியூகத்திற்குள்
நீங்கள் இருக்கும்போது
நாம் ஆயுதபாணியா
நிராயுதபாணியா என்று
எப்போதும் யோசிக்கிறீர்கள்
உங்கள் ஆயுதங்களை
நீங்கள் பயன்படுத்தக்
கற்றுக் கொள்வதற்குள்
யுத்தம் முடிவுக்கு வந்துவிடலாம்
சரணடைவதா
எதிர்த்துப் போரிடுவதா
என்று ஏன் உடனடியாக
முடிவெடுக்க விரும்புகிறீர்கள்
யுத்தத்தில்
நீங்களாக எடுக்கும்
எந்த முடிவும்
உங்களது கற்பனைகள் மட்டுமே
வியூகத்திற்குள் இருக்கும்போது
எதிரியின் பலம் குறித்தும்
பலவீனம் குறித்தும்
ஏன் இவ்வளவு சிந்திக்கிறீர்கள்
எதிரியும்
தன்னைப் பற்றி
அவ்வளவு குழப்பங்களுடன்தான்
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்
உடைத்துத் திறக்கக்கூடிய
ஒரே ஒரு அரணைப் பற்றி
உங்கள் வரைபடத்தில்
துல்லியமாகக் குறிக்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு
விரிக்கப்பட்ட
மரண வலையாகவும் இருக்கலாம்
இல்லையா?
வியூகத்திற்குள் இருக்கும்போது
நான் முதலில்
சிந்திப்பதை நிறுத்தி விடுகிறேன்
சிந்திப்பதை நிறுத்தும்போது
நாம் பயப்படுவதும்
நின்று விடுகிறது
அப்போது நான்
ஒரு பியர் பாட்டிலையோ
ஒரு புத்தகத்தையோ
திறக்கிறேன்.
அவை நமக்கு முதலில்
மறதியைக் கொண்டு வருகின்றன
பிறகு
அதன் வழியே விடுதலையை
வியூகத்தில் இருக்கும்போது
நான் புதிதாக ஒரு பெண்ணைக்
காதலிக்கத் தொடங்குகிறேன்
அது நம்மைப்
புதிதாக வேறொரு வியூகத்திற்குள்
செலுத்தி விடுகிறது
வியூகத்தில் இருக்கும்போது
தியானம் செய்வதோ
இயற்கை உணவுகளை சாப்பிடுவதோ
’ஜிம்’மிற்கு செல்வதோ
மிகவும் நல்லது
நாம் ஏதாவது ஒன்றைத்
தீவிரமாகப் பின்பற்றாவிட்டால்
வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்
வியூகத்திற்குள் இருக்கும்போது
புதிதாக நீங்கள்
ஒரு செல்போனையோ
காரையோ வாங்குவது சிறந்தது
வியூகத்தின்போது
நம்மிடம் இருந்து பறிக்கப்படுபவை
எதுவென்று நமக்குத் தெரியாது
வியூகத்தில் நீங்கள்
அபிமன்யுவைப்போல
திகைத்துப் போய்விடுகிறீர்கள்
கிறிஸ்துவைப்போல
அமைதியாக ரத்தம் சிந்துங்கள்
சிலுவையில் தொங்கியபடி
எதிரியின் பாவங்களை மன்னியுங்கள்
வேறெப்படியும்
வியூகத்திலிருந்து
வெளியேற முடியாது
வியூகத்தில்
எதிர்த்துப் போரிட
நீங்கள் ஒரு சத்ரியனோ
போராளியோ அல்ல
நீங்கள் வெறுமனே
இந்தக் கவிதையைப்
படிப்பவர்
அல்லது
எழுதுபவர்தானே
=
யாரோ கவனிக்கும்போது
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்
ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்
பேருந்தில் ஒருவன்
செல்போனை அணைத்துவிடுகிறான்
இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்
குழதைகளின் இயல்பு
திடீரென மாறி விடுகிறது
அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்
ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்
மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்
இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்
ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்
பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன
கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன
பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது
மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்
அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்
குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்
மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது
ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்
யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்
ஒரு கொலைகாரன்
தன்கத்தியை மறைத்து வைக்கிறான்
கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்
சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்
ஒரு தவம்
கலைகிறது
குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர் கொட்டாவியை
அடக்கிக்கொள்கிறார்
ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்
ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே பொய் சொல்கிறான்
மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன
கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்
சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்
சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன
முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே
தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்
=
நினைவூட்டல்களின் காலம்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
ஒருவருக்கும்
திரும்பிப் பார்க்க
ஒன்றுமில்லாத
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
கொடுத்ததைப்
பெற்றுக்கொண்டதை
அர்ப்பணித்துக்கொண்டதை
இழந்து வந்ததை
கண்துஞ்சாமல் இருந்ததை
கணக்குகள் பார்க்காதிருந்ததை
சிதறியதைக் கோர்த்துத் தந்ததை
உடைந்தவற்றை ஒட்டியதை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
நீ நினைத்துப் பார்ப்பாயா?
எல்லாவற்றையும் மாற்ற முடியும்
என்ற அப்போதைய நம்பிக்கைகளை
உண்மையாகவே கொஞ்சம் மாற்றியபோது
அடைந்த உவகைகளை
சாய்ந்துகொள்ளக் கிடைத்த தோள்களே
போதுமாக இருந்த நம் பயணங்களை
ஒரு பிடிமானமும் அற்று வீழ்ந்தபோது
அந்தரத்தில் தாங்கிய கைகளை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
இப்போது கொஞ்சம் கருணை காட்டுவாயா?
இதைவிடவும் பெரிய கஷ்டங்களைத்
தாங்க முடிந்ததை
இதைவிடவும் பெரிய தவறுகளை
மன்னிக்க முடிந்ததை
பெரியதாகத் தோன்றிய
நமது சிறிய காதல்களை
அப்போது சிறியதாகத் தோன்றிய
நம் பெரிய வாதைகளை
*
உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?
இனி திரும்பப் பெற முடியாத
ஒரு காலத்தை
இனி மீட்கமுடியாத
ஒரு பருவத்தை
இனி கண்டுபிடிக்கமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை
இனி நிரூபிக்கமுடியாத
சில நியாயங்களை
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
நினைத்துப் பார்ப்பதன் விலையை
யாரும் செலுத்தத் தயாரில்லாத
ஒரு காலத்தில்
அல்லது
மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
=
சாரதிகள்
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
எல்லா இடங்களிலும்
வாகனத்தின்
ஒரு கதவைத் திறந்து வைத்தபடி
செய்தித்தாளின் படித்த செய்தியையே
மறுபடி படித்தபடி
பாதி தூங்கியபடி
ரேடியோவின் குரல்களைத் தின்றபடி
எதையோ வெறுமனே சுத்தப்படுத்தியபடி
ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி
அறிவிப்புப் பலகைகளைத்
திரும்பத் திரும்ப உற்று நோக்கியபடி
கடந்து செல்பவர்களைப் பார்த்தபடி
நேரத்தின் நிழல்களை வெறித்தபடி
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
மஹா யுத்தங்களில் தேரோட்டிக் களைத்து
இப்போது இங்கே வந்து
கார் ஷெட்டுகளில்
அலுவலக வாசல்களில்
அழகு நிலையங்களில் களைப்புடன்
உணவகங்களில் மெல்லிய பசியோடு
வணிக வளாகங்களின் பாதாள வெளிகளில்
அசைவற்ற மரத்தடிகளில்
அரங்குகளின் கொந்தளிப்புகளுக்கு வெளியே
பேரமைதிக்குள்
சாரதிகளுக்குப்
புறப்படும் இடமென்று எதுவுமில்லை
போகுமிடமென்றும் எதுவுமில்லை
பயணத்திற்கு அப்பால்
எந்த இடமும்
அவர்களுடையது இல்லை
சாரதிகள்
பயணத்தின்போதும் வெறுமனே
காத்திருக்கிறார்கள்
இன்னொரு
பயணத்திற்காக
அல்லது
இன்னொரு காத்திருத்தலுக்காக
அவர்கள்
நகரவே நகராத ஒரு வாகனத்தை
இடையறாது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் மழையைப் பார்க்கிறீர்கள்
வெயிலைப் பார்க்கிறீர்கள்
பகல்களையும் இரவுகளையும் பார்க்கிறீர்கள்
உங்களோடு தொடர்ந்துவரும்
மரங்களையும் நினைவுகளையும்
பார்த்துக்கொண்டே வருகிறீர்கள்
ஒரு சாரதி
சாலையை மட்டுமே பார்க்கிறான்
மைல்கற்களையும் வளைவுகளையும்
அபாயங்களையும் மட்டுமே பார்க்கிறான்
ஒரு வாகனம்
உயிருள்ளதுதான்
உயிரற்றதும்தான்
ஒரு சாரதி
உயிருள்ளவன்தான்
உயிரற்றவன்தான்
இரண்டையும் ஆள்கின்றன
எந்திர விதிகள்
ஒவ்வொருமுறையும்
நீங்கள் உங்கள் வாகனத்தோடு
ஒரு சாரதியை விட்டு விட்டு
ஏதோ ஒரு கதவின் பின்னே
மறைகிறீர்கள்
அங்கே உங்களுக்கு
ஒரு வேலை இருக்கிறது
ஒரு வாழ்க்கை இருக்கிறது
ஒரு உலகம் இருக்கிறது
சாரதி
உலகத்திற்கு வெளியே வாழ்கிறான்
தன் மொத்த உடலையும்
உலகத்தை நோக்கி செலுத்தியபடி
உலகத்தின் வாசலில் காத்திருக்கிறான்
நீங்கள் வேறு யாரையும்
அவ்வளவு சார்ந்து இருந்ததில்லை
நீங்கள் வேறு யாருக்கும்
உங்களை அவ்வளவு
ஒப்புக் கொடுத்ததில்லை
ஒரு சாரதி
உங்களை வழிநடத்துகிறான்
கடவுள்கள் இல்லாத உலகில்
ஒரு சாரதி மட்டுமே
உங்களை மோட்சத்திற்கும்
நரகத்திற்கும் இட்டுச் செல்கிறான்
அதுதான்
பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
அவ்வளவு வெறுத்துக் கொள்கிறீர்கள்
பரஸ்பரம்
ஒருவரை ஒருவர்
மரணத்தின் பாதையில்
அழைத்துச் செல்கிறீர்கள்
நன்றி: உயிர்மை, அக்டோபர் 2010
manushyaputhiran@gmail.com
மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று
படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று
தண்டனையை
ஒத்தி வைப்பது என்று
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று
மறதியின்
இன்னொரு பெயர் என்று
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
என்று
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று
=
வியூகத்திற்குள் இருக்கும்போது
வியூகத்திற்குள்
நீங்கள் இருக்கும்போது
நாம் ஆயுதபாணியா
நிராயுதபாணியா என்று
எப்போதும் யோசிக்கிறீர்கள்
உங்கள் ஆயுதங்களை
நீங்கள் பயன்படுத்தக்
கற்றுக் கொள்வதற்குள்
யுத்தம் முடிவுக்கு வந்துவிடலாம்
சரணடைவதா
எதிர்த்துப் போரிடுவதா
என்று ஏன் உடனடியாக
முடிவெடுக்க விரும்புகிறீர்கள்
யுத்தத்தில்
நீங்களாக எடுக்கும்
எந்த முடிவும்
உங்களது கற்பனைகள் மட்டுமே
வியூகத்திற்குள் இருக்கும்போது
எதிரியின் பலம் குறித்தும்
பலவீனம் குறித்தும்
ஏன் இவ்வளவு சிந்திக்கிறீர்கள்
எதிரியும்
தன்னைப் பற்றி
அவ்வளவு குழப்பங்களுடன்தான்
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்
உடைத்துத் திறக்கக்கூடிய
ஒரே ஒரு அரணைப் பற்றி
உங்கள் வரைபடத்தில்
துல்லியமாகக் குறிக்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு
விரிக்கப்பட்ட
மரண வலையாகவும் இருக்கலாம்
இல்லையா?
வியூகத்திற்குள் இருக்கும்போது
நான் முதலில்
சிந்திப்பதை நிறுத்தி விடுகிறேன்
சிந்திப்பதை நிறுத்தும்போது
நாம் பயப்படுவதும்
நின்று விடுகிறது
அப்போது நான்
ஒரு பியர் பாட்டிலையோ
ஒரு புத்தகத்தையோ
திறக்கிறேன்.
அவை நமக்கு முதலில்
மறதியைக் கொண்டு வருகின்றன
பிறகு
அதன் வழியே விடுதலையை
வியூகத்தில் இருக்கும்போது
நான் புதிதாக ஒரு பெண்ணைக்
காதலிக்கத் தொடங்குகிறேன்
அது நம்மைப்
புதிதாக வேறொரு வியூகத்திற்குள்
செலுத்தி விடுகிறது
வியூகத்தில் இருக்கும்போது
தியானம் செய்வதோ
இயற்கை உணவுகளை சாப்பிடுவதோ
’ஜிம்’மிற்கு செல்வதோ
மிகவும் நல்லது
நாம் ஏதாவது ஒன்றைத்
தீவிரமாகப் பின்பற்றாவிட்டால்
வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்
வியூகத்திற்குள் இருக்கும்போது
புதிதாக நீங்கள்
ஒரு செல்போனையோ
காரையோ வாங்குவது சிறந்தது
வியூகத்தின்போது
நம்மிடம் இருந்து பறிக்கப்படுபவை
எதுவென்று நமக்குத் தெரியாது
வியூகத்தில் நீங்கள்
அபிமன்யுவைப்போல
திகைத்துப் போய்விடுகிறீர்கள்
கிறிஸ்துவைப்போல
அமைதியாக ரத்தம் சிந்துங்கள்
சிலுவையில் தொங்கியபடி
எதிரியின் பாவங்களை மன்னியுங்கள்
வேறெப்படியும்
வியூகத்திலிருந்து
வெளியேற முடியாது
வியூகத்தில்
எதிர்த்துப் போரிட
நீங்கள் ஒரு சத்ரியனோ
போராளியோ அல்ல
நீங்கள் வெறுமனே
இந்தக் கவிதையைப்
படிப்பவர்
அல்லது
எழுதுபவர்தானே
=
யாரோ கவனிக்கும்போது
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்
ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்
பேருந்தில் ஒருவன்
செல்போனை அணைத்துவிடுகிறான்
இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்
குழதைகளின் இயல்பு
திடீரென மாறி விடுகிறது
அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்
ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்
மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்
இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்
ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்
பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன
கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன
பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது
மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்
அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்
குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்
மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது
ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்
யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்
ஒரு கொலைகாரன்
தன்கத்தியை மறைத்து வைக்கிறான்
கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்
சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்
ஒரு தவம்
கலைகிறது
குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர் கொட்டாவியை
அடக்கிக்கொள்கிறார்
ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்
ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே பொய் சொல்கிறான்
மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன
கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்
சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்
சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன
முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே
தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்
=
நினைவூட்டல்களின் காலம்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
ஒருவருக்கும்
திரும்பிப் பார்க்க
ஒன்றுமில்லாத
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
கொடுத்ததைப்
பெற்றுக்கொண்டதை
அர்ப்பணித்துக்கொண்டதை
இழந்து வந்ததை
கண்துஞ்சாமல் இருந்ததை
கணக்குகள் பார்க்காதிருந்ததை
சிதறியதைக் கோர்த்துத் தந்ததை
உடைந்தவற்றை ஒட்டியதை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
நீ நினைத்துப் பார்ப்பாயா?
எல்லாவற்றையும் மாற்ற முடியும்
என்ற அப்போதைய நம்பிக்கைகளை
உண்மையாகவே கொஞ்சம் மாற்றியபோது
அடைந்த உவகைகளை
சாய்ந்துகொள்ளக் கிடைத்த தோள்களே
போதுமாக இருந்த நம் பயணங்களை
ஒரு பிடிமானமும் அற்று வீழ்ந்தபோது
அந்தரத்தில் தாங்கிய கைகளை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
இப்போது கொஞ்சம் கருணை காட்டுவாயா?
இதைவிடவும் பெரிய கஷ்டங்களைத்
தாங்க முடிந்ததை
இதைவிடவும் பெரிய தவறுகளை
மன்னிக்க முடிந்ததை
பெரியதாகத் தோன்றிய
நமது சிறிய காதல்களை
அப்போது சிறியதாகத் தோன்றிய
நம் பெரிய வாதைகளை
*
உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?
இனி திரும்பப் பெற முடியாத
ஒரு காலத்தை
இனி மீட்கமுடியாத
ஒரு பருவத்தை
இனி கண்டுபிடிக்கமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை
இனி நிரூபிக்கமுடியாத
சில நியாயங்களை
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
நினைத்துப் பார்ப்பதன் விலையை
யாரும் செலுத்தத் தயாரில்லாத
ஒரு காலத்தில்
அல்லது
மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
=
சாரதிகள்
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
எல்லா இடங்களிலும்
வாகனத்தின்
ஒரு கதவைத் திறந்து வைத்தபடி
செய்தித்தாளின் படித்த செய்தியையே
மறுபடி படித்தபடி
பாதி தூங்கியபடி
ரேடியோவின் குரல்களைத் தின்றபடி
எதையோ வெறுமனே சுத்தப்படுத்தியபடி
ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி
அறிவிப்புப் பலகைகளைத்
திரும்பத் திரும்ப உற்று நோக்கியபடி
கடந்து செல்பவர்களைப் பார்த்தபடி
நேரத்தின் நிழல்களை வெறித்தபடி
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
மஹா யுத்தங்களில் தேரோட்டிக் களைத்து
இப்போது இங்கே வந்து
கார் ஷெட்டுகளில்
அலுவலக வாசல்களில்
அழகு நிலையங்களில் களைப்புடன்
உணவகங்களில் மெல்லிய பசியோடு
வணிக வளாகங்களின் பாதாள வெளிகளில்
அசைவற்ற மரத்தடிகளில்
அரங்குகளின் கொந்தளிப்புகளுக்கு வெளியே
பேரமைதிக்குள்
சாரதிகளுக்குப்
புறப்படும் இடமென்று எதுவுமில்லை
போகுமிடமென்றும் எதுவுமில்லை
பயணத்திற்கு அப்பால்
எந்த இடமும்
அவர்களுடையது இல்லை
சாரதிகள்
பயணத்தின்போதும் வெறுமனே
காத்திருக்கிறார்கள்
இன்னொரு
பயணத்திற்காக
அல்லது
இன்னொரு காத்திருத்தலுக்காக
அவர்கள்
நகரவே நகராத ஒரு வாகனத்தை
இடையறாது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் மழையைப் பார்க்கிறீர்கள்
வெயிலைப் பார்க்கிறீர்கள்
பகல்களையும் இரவுகளையும் பார்க்கிறீர்கள்
உங்களோடு தொடர்ந்துவரும்
மரங்களையும் நினைவுகளையும்
பார்த்துக்கொண்டே வருகிறீர்கள்
ஒரு சாரதி
சாலையை மட்டுமே பார்க்கிறான்
மைல்கற்களையும் வளைவுகளையும்
அபாயங்களையும் மட்டுமே பார்க்கிறான்
ஒரு வாகனம்
உயிருள்ளதுதான்
உயிரற்றதும்தான்
ஒரு சாரதி
உயிருள்ளவன்தான்
உயிரற்றவன்தான்
இரண்டையும் ஆள்கின்றன
எந்திர விதிகள்
ஒவ்வொருமுறையும்
நீங்கள் உங்கள் வாகனத்தோடு
ஒரு சாரதியை விட்டு விட்டு
ஏதோ ஒரு கதவின் பின்னே
மறைகிறீர்கள்
அங்கே உங்களுக்கு
ஒரு வேலை இருக்கிறது
ஒரு வாழ்க்கை இருக்கிறது
ஒரு உலகம் இருக்கிறது
சாரதி
உலகத்திற்கு வெளியே வாழ்கிறான்
தன் மொத்த உடலையும்
உலகத்தை நோக்கி செலுத்தியபடி
உலகத்தின் வாசலில் காத்திருக்கிறான்
நீங்கள் வேறு யாரையும்
அவ்வளவு சார்ந்து இருந்ததில்லை
நீங்கள் வேறு யாருக்கும்
உங்களை அவ்வளவு
ஒப்புக் கொடுத்ததில்லை
ஒரு சாரதி
உங்களை வழிநடத்துகிறான்
கடவுள்கள் இல்லாத உலகில்
ஒரு சாரதி மட்டுமே
உங்களை மோட்சத்திற்கும்
நரகத்திற்கும் இட்டுச் செல்கிறான்
அதுதான்
பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
அவ்வளவு வெறுத்துக் கொள்கிறீர்கள்
பரஸ்பரம்
ஒருவரை ஒருவர்
மரணத்தின் பாதையில்
அழைத்துச் செல்கிறீர்கள்
நன்றி: உயிர்மை, அக்டோபர் 2010
manushyaputhiran@gmail.com
Saturday, August 28, 2010
கவிக்கோ அப்துல் ரகுமான் Collections
கண்ணகியின் கதையைச் சொல்ல தலையணை சைஸில் நூல் தேவைப்பட்டது இளங்கோவடிகளுக்கு. அதன் சாரம்சத்தை ஒரு சில வரிகளிலேயே சொல்லி முடித்து விட்டார் கவிக்கோ அவர்கள்.
“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)
சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது
இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.
“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”
இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.
“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)
சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது
இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.
“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”
இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.
கவிக்கோ அப்துல் ரஹ்மானின் collectios
’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது
‘God, give me smiles,’ I prayed
He gave me tears.
I asked for a boon
And you have cursed me’ – I said
God said:
Your prayers is like that of a farmer
Who wants a good harvest
But not the rains.
You do not know
That there are smiles in tears
And tears in smiles
To tell the truth,
Tears are the smiles of the eyes
And the smile, tears shed by the mouth
Have you not seen the dew drops
On flowers
At dawn?
That is the miracle of a
smile decorating herself with tears!
Have you not seen the lightning flash
Hidden in the clouds?
That is the beauty of the smile
Being born of tears!
And, what my son, is the pearl?
That is the tear-drop
Doing penance inside an oyster
And the mystery of its
Being transformed into a smile
Know that the smile-flowers
Which spring from tears
Neither wilt nor wither
Again it’s the tears
That show who you are!
While the smile
Many times hides the real you!
Thanks to : Varalotti for Translation – Indus Ladies.com
கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
ஆலாபனை என்ற தொகுதியிலிருந்து
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது
‘God, give me smiles,’ I prayed
He gave me tears.
I asked for a boon
And you have cursed me’ – I said
God said:
Your prayers is like that of a farmer
Who wants a good harvest
But not the rains.
You do not know
That there are smiles in tears
And tears in smiles
To tell the truth,
Tears are the smiles of the eyes
And the smile, tears shed by the mouth
Have you not seen the dew drops
On flowers
At dawn?
That is the miracle of a
smile decorating herself with tears!
Have you not seen the lightning flash
Hidden in the clouds?
That is the beauty of the smile
Being born of tears!
And, what my son, is the pearl?
That is the tear-drop
Doing penance inside an oyster
And the mystery of its
Being transformed into a smile
Know that the smile-flowers
Which spring from tears
Neither wilt nor wither
Again it’s the tears
That show who you are!
While the smile
Many times hides the real you!
Thanks to : Varalotti for Translation – Indus Ladies.com
கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
ஆலாபனை என்ற தொகுதியிலிருந்து
கவிக்கோ அப்துல் ரகுமான் Collectios
1.
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)
2.
ஆன்மாவின் விபச்சாரம்
உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
3. ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.
இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?
என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.
4. கஜல் ஓர் அறிமுகம்.
‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்
4.
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)
2.
ஆன்மாவின் விபச்சாரம்
உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
3. ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.
இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?
என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.
4. கஜல் ஓர் அறிமுகம்.
‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்
4.
Monday, August 23, 2010
ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் :மஹேஷ் முணசிங்ஹ
முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
Subscribe to:
Posts (Atom)