About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Saturday, July 24, 2010

தபு சங்கர் கவிதைகள்

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
**********************************

தபு சங்கர் கவிதைகள்

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
**********************************

யார் பிள்ளை?

அந்த நாட்டு அரசனுக்கு எப்போதுமே ஒரு கவலை,என்னன்னா ஒரு முறை நகர்வலம் போனபோது இரண்டு பேர் பேசிட்டிருந்தத கேட்டான் .அதில் ஒருத்தன் "டே,இவன் என்ன ராஜாவோட புள்ளயா?பிச்சைக்காரன் பெத்த புள்ளதான"அப்படின்னு சொல்லிட்டான்.தான் உண்மையிலேயே ராஜா புள்ளதானா இல்லையா அப்படிங்கறதுதான் அவன் கவலை .
இது இப்படி இருக்க ,ஒருநாள் பக்கத்து ஊருக்கு தன் பரிவாரங்களோடு போய் தங்கி இருந்தபோது அவன் தங்கியிருந்த மண்டபத்தின் எதிரே உள்ள ஒரு படலில் வெள்ளரிக்காய் நிறைய காச்சிருந்தது.ராஜா ஒருத்தனைக் கூப்பிட்டு "அதுல ஒரு நாலு காயப் பறிச்சிட்டு வா ,சாப்பிடலாம் "னான்.அப்போ தெருவோரமா உக்காந்திருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் "ராஜா ! அந்த காய சாப்பிட வேணாம் கசக்கும்"னான்.அதுபடியே பறிச்சிட்டு வந்த காயும் கசப்பாத்தான் இருந்தது. ராஜா "நீ இந்த ஊரா"ன்னு கேட்டான்.அதுக்கு அவன் "இல்லை நான் இந்த ஊரு இல்லை வழிப்போக்கந்தான்"ன்னான். ராஜா ஆச்சரியப்பட்டு "பரவால்லயே !அப்புறம் எப்படி கண்டு புடிச்ச?நீயோ குருடன்.ஏற்கெனவே சாப்பிட்டு பாத்தியா?ன்னு கேட்டான். குருடன் சொன்னான்"இல்ல ,நான் சாப்பிடல.ஆனா இத்தனை ஜனம் வந்து போற கோவில் மண்டபம் இது ,இதுக்கு எதுத்தாப்புல ஒரு கொடில இத்தனை காய ஜனங்க சாப்புடாம விட்டு வெச்சுருப்பாங்களா ?அதான் சொன்னேன்"ன்னான்.ராஜாவும் சந்தோஷமாகி " நீ இனிமே எங்கயும் அலைய வேண்டாம்.இங்கயே தங்கிக்கலாம்.தினமும் உனக்கு கோவிலில் இருந்து ஒரு பட்டை சோறு கிடைக்கும்"அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குதிரை விக்கறவன் ராஜாகிட்ட வந்தான்.குதிரையெல்லாம் காமிச்சு பேரம் பேசி முடிஞ்சதும் சொன்னான்"ராஜா !ஒரு சின்ன பந்தயம்.என்கிட்டே நாலு பெண் குதிரையும் அதோட குட்டிகளும் இருக்கு.தப்பில்லாம தாயையும் குட்டியையும் சரியா சேர்த்துட்டீங்கன்னா இந்த குதிரைக்கல்லாம் காசு வேணாம்"ன்னான்.ராஜா"இதென்ன பெரிய விஷயம்"ன்னுட்டு போய்ப் பாத்தா நாலு குதிரையும் அதோட குட்டிகளும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கு எந்த வித்தியாசமும் இல்ல .ராஜா ஒரு நிமிஷம் யோசிச்சு குட்டிகளை அவுத்து விடச் சொன்னார். குட்டிகள் தாய்க் குதிரைகள் கிட்ட போனதும் அதுகளுக்கே தெரியல அதோட அம்மா யாருன்னு.ராஜா "எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு ,கண்டு பிடிக்கறேன் "ன்னு சொல்லிட்டு,மந்திரிகிட்ட வந்து "அன்னிக்கு கோவில் மண்டபத்துல பாத்தனே ,அந்த குருடனைக் கூட்டிட்டு வாங்க "ன்னான். அவன் வந்ததும் பிரச்சினையைச் சொல்லி என்ன பண்ணலாம்னான்.குருடன் "குட்டிக வேணும்னா திணறலாம்,ஆனா தாய்க்குத் தெரியும் குட்டி எதுன்னு,அதனால தாய்க் குதிரைகளை அவுத்து விடச் சொல்லுங்க"ன்னான்.அதே மாதிரி செய்து கண்டு பிடிச்சதும் ராஜா சந்தோஷமாகி "உனக்கு இனிமே ரெண்டு பட்டை சோறு தரச் சொல்றேன் சாப்பிடு"ன்னான்.
அப்போ ஒரு வைர வியாபாரி ராஜாவைப் பாக்க வந்தான்.அவனும் அதே மாதிரி எல்லாம் பேசி முடிஞ்சதும் "ராஜா!என்கிட்டே ஒரு அற்புதமான பெரிய வைரம் இருக்கு.அதைப் போலவே ஒரு கண்ணாடிக் கல்லும் இருக்கு எது அசல்னு கண்டு புடிங்க பாக்கலாம்"ன்னான்.வழக்கம் போல குருடன்கிட்ட கேட்டாரு ராஜா ,அவன் "ரெண்டையும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயில்ல வையுங்க ,கண்ணாடி சீக்கிரம் சூடாகும் ,வைரம் அப்படி ஆவாது"அப்படிங்க , ராஜாவும் அப்படியே செஞ்சு கண்டு பிடிச்சிட்டாரு.வழக்கம் போல சந்தோஷமா இன்னொரு பட்டை சோறு கொடுக்கச் சொல்லிட்டு,அவனை தனியா கூப்பிட்டுப் போயி தன் கவலையைச் சொல்லி ,தான் யாருன்னு கண்டு புடிக்க முடியுமான்னு கேட்டாரு.
அவன் கொஞ்சமும் யோசிக்காம "ராஜா ! நீ பிச்சைக்காரன் புள்ளதான்,ஏன்னா நான் எவ்வளவோ புத்திசாலித் தனமா உன் பிரச்சனையைத் தீத்து வெச்சேன்.இதே ராஜா பெத்த புள்ளன்னா பொன்னையோ பொருளையோ கொடுப்பான்.ஆனா உன் புத்தி சோத்து மேலதான் இருந்தது,அத தாண்டி உன்னால யோசிக்க முடில பாத்தியா?"ன்னான்
முல்லா ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்.அது ஒரு கப்பலில் உள்ள வேலை.முன் அனுபவம் எதுவும் இல்லாத முல்லாவைப் பார்த்து அந்த முதலாளி எரிச்சலுடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்."நீ கப்பலில் சென்று கொண்டிருக்கிறாய்,அப்போது பெரிய அலை ஒன்று வருகிறது,உதவிக்கோ அங்கு யாருமில்லை .என்ன செய்வாய்?"என்றார்.முல்லா சிறிதும் யோசிக்காமல்"கப்பலில் உள்ள கனமான நங்கூரத்தை எடுத்து வெளியில் போடுவேன்"என்றார்."இன்னுமொரு மிகப்பெரிய அலை வருகிறது!அப்போது?".முல்லா"மீண்டும் அதிக கனத்தை வெளியில் இறக்குவேன்"என்றார்."மீண்டும் அதை விடப் பெரிய அலை ஒன்று வந்தால்.."முல்லா"மீண்டும் அதிக கனமான பொருளை கப்பலில் இருந்து தொங்க விடுவேன்"என்றார்.எரிச்சலான முதலாளி "அந்த கனமான பொருள்களை எங்கிருந்து பெறுவாய்?"என்றார்.முல்லா அமைதியாக "நீங்கள் அந்த அலைகளை எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார்.

Saturday, July 3, 2010

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் - ஊழ்விதி கவிதை -30

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++++++

ஊழ்விதி

+++++++++++++++++++++++++++++++++

"உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது."

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++

<< ஊழ்விதி >>

++++++++++++++++++++++++

இராப் பகலாகச் சிந்திக் காதவர்

எவர் உங்களில் இருக்கிறார்

போதை ஏறிய

பூத மன்னர் ஆட்சியில்

விதவைகள் கண்ணீரும்

அனாதைகள் அழுதிடும் நீரும்

விழுந்திடும்

உலகத்து ஊழ் விதியை

ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?

பரிணாம விதியை நம்புவோரில்

ஒருவன் நானும் !

பூரண விடுதலைப் புரட்சிகள்

கோர மாந்தரால்

உதித்தெழும் என்று

நம்புவோன் நான் !

மதங்களும் அரசாங் கமும்

உன்னத பீடத்துக் குயரும் என்று

நம்புவோன் நான் !

+++++++++

எனைச் சுற்றி இருப்பவர்

அனைவரும்

பூதங்கள் உதிப்பதைக் காணும்

குள்ளர்கள் !

தவளைகள் போல்

கத்துவார் இந்தக் குள்ளர் !

இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்

இருப்பிட மாய்த்

திருப்பி வந்துள்ளது !

விஞ்ஞானக் கல்வி படைத்தவை எல்லாம்

இந்தப் புது ஆதி வாசிகளால்

அந்த மாகி அழிந்தன !

கற்காலத்துக் குகை வாசிகளாய்

தற்போது மாறி விட்டோம் !

நாம் படைத்த

நாச எந்திரங்களும்

நுணுக்கத் தொழிற்துறைக்

கொலைக் கருவிகளும்

மினுப்பதைத் தவிர

நம்மைத்

தனித்துக் காட்டு வதில்லை !

++++++++++++

மேற்கிசை : மாஹ்லர்

Adagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம் கர்நாடக இசையின் தாளம் என்ற பிரயோகத்தை இதனுடன் ஓரளவு ஒப்பிடலாம். ஆனாலும் இவை இரண்டும் வெவ்வேறு வகைப்பட்டவை.
எல்லா இசையையும் தாளத்தால் பிரிக்க முடியும். சாதாரணமாக நாம் தாளம் போடுவதால் இந்த ஒலியை பல சிறிய பகுதிகளாக பிரிக்கிறோம். இந்த பகுதிகள் ஒரே அளவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.அப்படி பிரிக்கப்பட்ட இசை குறியீட்டு முறையால் தொகுக்க முடியும். இதை Musical Notation(இசை குறியீடு) என்பார்கள். நேர முறைப்படி பிரிக்கப்படும் இசை பல bars என வகுக்கப்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள Mahler ஒத்திசைவு (Symphony) Number 5 (Death in Venice) உபயோகப்படுத்தியிருக்கும் Adagietto மெதுவான இசை. இதனாலேயே அதன் அடிநாதமும் சோகமாக நமக்கு ஒலிக்கும்.இதை 1900களில் கேட்ட அனைவரும் இருபதாம் நூற்றாண்டின் உலகப்போர்/அழிவு ஆகியவற்றை மாஹ்லர் கணித்ததாக நினைத்தனர்.
இதனாலேயே இந்த ஒத்திசைவை இருபதாம் நூற்றாண்டின் பிரதிபலிப்பு எனக் குறிப்பிடுகிறார்கள்.மெதுவாக தொடங்கும் இசை, தாளவாத்தியங்களினால் ராணுவ அணிவகுப்பின் சத்தத்தையும், அதைத் தொடரும் வயலின்/செல்லோ இசை அழிவையும் குறிப்பிடுவதாகும்.முடிவில் வரும் பல வாத்திய இசை dissonance effect உருவாக்குவதால் avant-garde இசைக்கும் தந்தை என இதை கருதுகிறார்கள். Avant-garde என்பது வழமையான கலை கூறுகளை உடைத்து , புது பாணியை ஆராயும் நிலை எனக் கூறலாம். Pointilism ஓவியத்திற்கான avant garde ஆரம்பம். அதேபோல தானியங்கி இசை, கணித முறைப்படி கட்டப்பட்ட serialism இவை ஆரம்ப கூறுகளை இந்த ஒத்திசைவிலிருந்தே பெற்றன.

கராத்தே கிட்

அசராம அடிப்பதுதான் ஜாக்கிசான் ஸ்டைல். கராத்தே கிட் படத்தில் அசராமல் நடித்திருக்கிறார் ஜாக்கி! கடைசியாக வெளியான போலீஸ் ஸ்டோரியிலேயே அழுது புரண்டிருந்தாலும்.. கராத்தே கிட்டில் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். அமைதியான சீனர்களுக்கேயான கிழட்டு நடை! புன்னைகையில்லாத அமைதியான முகபாவம்.. இத்தனைவருடமாக ஜாக்கியை ஹாலிவுட்டும் சீனர்களும் விரட்டி விரட்டி சண்டையே போட வைத்துவிட்டனர். இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைதான் அதுவும் மிகமிக மிருதுவான வன்முறையில்லாத சண்டை!
ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். (அங்கேயும் வாரிசுகள் தொல்லைதானா!.. தந்தை மகனுக்காற்றும் உதவி!) சின்ன பையன்தான் ஆனால் சிறுத்தைக்குட்டி!. அம்மாவிடம் நாம ஊருக்கே போயிரலாம்மா! என்று அழும் போதும்.. கிளைமாக்ஸில் உடைந்த காலோடு சண்டையிடும் போதும் உழைப்பு தெரிகிறது. படத்தின் நாயகனின் அம்மாவாக வரும் தாராஜி ஹன்சன். சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கவர்கிறார்.
படம் முழுக்க சீனாவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் , கம்யூனிச சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்டதோ என்று நினைக்கவைக்கிறது படம் சொல்லும் செய்தி மற்றும் அதன் அரசியல்! பழமைவாதியான ஜாக்கி குங்பூ எனும் ஆயுதத்தை சமாதானத்திற்கான கலையாகவும், தற்கால குருவான வில்லன் குங்பூ எதிரிகளை சாகும்வரை அழிக்கவும் பயன்படுத்துவாக சித்தரிக்கப்படுகிறது. சீனர்களை அமெரிக்க நாட்டின் கருப்பின சிறுவன் தோற்கடிக்கிறான்! இப்படி படம் முழுக்க நிறைய சின்ன சின்ன அரசியல் இருந்தாலும்.. படத்தை தயாரித்திருப்பது ஒரு அமெரிக்க நாட்டின் பிரஜை! அதனால் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது! படம் முழுக்க முழுக்க ஒரு மாதிரி அழுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதும் சீன நகரங்களை நெருக்கடியாகவும் சீனர்களை வெறிபிடித்தவர்களாகவும் காட்டுவது நெருடல்.
குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும்.. படம் முழுக்க வன்முறை நிறைந்திருக்கிறது. தியேட்டரில் நிறைய குட்டீஸ்களைக் காண முடிந்தது. என்ன செய்ய? வேறு வழியில்லை, நம்மூர் சுறாக்களுக்கும் சிங்கத்துக்கும் குட்டிப்பிசாசுகளுக்கும் இந்த வன்முறைகள் குறைவுதான். சொல்லப்போனால் குழந்தைகள் மனதில் தைரியத்தை விதைக்கலாம். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் , குங்பூ பயிற்சிக்காக ஜாக்கி அந்த சிறுவனை அழைத்துச் செல்லும் மலைகள் நிறைய புத்தக்கோயில்களும் பிரமிப்பு!
பயிற்சிக்காக ஆர்வத்தோடு வருகிற சிறுவனை விடாமல் அவனுடைய சட்டையை கழட்டி மாட்ட செய்வது.. அதைப்பற்றி தியேட்டரிலேயே பாருங்கள்.. ஒரு குட்டி ஜென் கதை பார்த்த திருப்தியை அளிக்கிறது கராத்தேகிட் திரைப்படம்! படம் பார்த்து முடிக்கும் போது குஷியான மூட் மனதிற்குள் நிரம்பி விடுகிறது. ஜாக்கிசானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஜேடன் ஸ்மித் அந்த குறையை தன்னுடைய அபாரமான நடிப்பால் போக்குகிறார்.
படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று டப்பிங்! சிம்பிள் மற்றும் பளிச் வசனங்கள். சில வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. முடிந்தவரைக்கும் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உசிதம்!
1984களில் வெளியான கராத்தே கிட் என்னும் படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை வில் ஸ்மித் தயாரித்துள்ளார். ஜாலியாக இரண்டு மணிநேரம் பார்க்க கூடிய நல்ல விறுவிறு சுருசுரு குங்பூ படம்

name