About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Sunday, June 20, 2010

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 ) by manushyaputhiran

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.

சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )

பிராந்தியவாதமும் ஐ.பி.எல்.லின் கலப்புமணமும்

வினோத பார்வையாளர்கள்

முதல் ஐ.பி.எல். ஆரம்பிக்கும் முன் அதன் செய்தியைச் சொல்லும் விதம், அறிமுகமான விளம்பரங்கள், ரசிகர்களின் பிராந்திய அடிப்படையிலான போட்டி மனப்பான்மையை முன்வைப்பதாக இருந்தன. ஐ.பி.எல். தன் வளர்ச்சிப்படிகளைக் கடந்த பின் அத்தகைய விளம்பரப் போக்கு கைவிடப்பட்டது. ஐ.பி.எல். அனைத்து தள மக்களுக்குமான ஒரு கேளிக்கையாக அறைகூவப்படுகிறது. ஐ.பி.எல். மூன்றாவது நாளில் சென்னை Vs டெக்கான் ஆட்டம் சென்னையில் நடந்தது. இப்போட்டியில் சென்னை ஆரம்பம் முதலே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருந்தது. பொதுவாக தாயக அணியின் ஆட்டம் தோல்வியை நோக்கிச் செல்லும் போது உள்ளூர் விசிறிகள் மிக அமைதியாக அதிருப்தி காட்டுவார்கள். ஆனால் இந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முடிந்த வரை கொண்டாடிவிடும் மனநிலையில்தான் இருந்தனர். தொடர்ச்சியான சலசலப்பும் தாவலும் கைத்தட்டலும் சொந்த ஊர் அணியின் நிச்சய தோல்வி தெரிந்து விட்ட பின்னரான ஜீவனில்லா ஓவர்களிலும் தொடர்ந்தது. இவர்கள் சற்று வினோதமான பார்வையாளர்கள்.

இந்தியா ஆடுவதற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை ஐ.பி.எல். விசிறிகள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். சர்வதேச ஆட்ட பார்வையாளர்களுக்கும் ஐ.பி.எல். விசிறிகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ‘இந்திய’ ரசிகர்கள் சர்வதேச தோல்வியைத் தமது வீழ்ச்சியாக நினைக்கும்படி ஒன்றிப்போகும் மேலோட்ட தேசியவாத உணர்வு கொண்டவர்கள். கணிசமாக ஆண்கள். தேசிய அணிக்கு உணர்ச்சிகரமான ஆதரவை ஆண்டாண்டு காலமாய் வெளிப்படுத்தி வந்துள்ள விசுவாசிகள். ஐ.பி.எல். இந்த விசுவாசத்தை சிதைக்கிறது. ஒட்டுமொத்தமான ஒரு இந்தியத் தன்மை ஐ.பி.எல். பாணி கிரிக்கெட்டில் உண்டு. என்றாலும் இரு காரணங்களால் அது எவ்விதமான உள்ளூர் விசுவாசத்தையும் இல்லாமலாக்குகிறது.



ஐ.பி.எல்.லும் இன்றைய தலைமுறையின் மிதவை மனநிலையும்

ஐ.பி.எல்.லில் நாம் காணும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்றைய கேளிக்கை கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் மேற்தட்டவர். மாநில அடையாளத்தைப் பொருட்படுத்தாத மாநகர நுனி ஆங்கில மாநகரவாசிகள். சமகால வாழ்வின் பலதரப்பட்ட தேவைகளை நிறை வேற்றும் அவசரத்தில் அவர்களுக்கு இத்தகைய தொடர்ச்சியாக ஆடப்பட்டு நிகழ்காலத்தின் வேகத்துக்கு உடன்பட்டு உடனடியாக மறந்து விடக்கூடிய வகைமையிலான T20 தோதானதாக உள்ளது. சமகால கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பெரும்பாலான உறவுகளின் சாரம் அன்பு அல்ல, அனுகூலமான தொடர்பு வலை மட்டுமே. அது போலவே ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடிப்படை கிரிக்கெட் அல்ல, கேளிக்கை - ஆதரிக்கும் அணியின் அடையாளத்தில் இருந்து அதன் வெற்றி - தோல்விகள் வரை மறந்துவிட ஊக்குவிக்கும் மூட்டமான கேளிக்கை.





மேலோட்ட அடையாளங்கள், அனுகூலங்கள்

அடுத்து ஐ.பி.எல். போன்ற தொடர்களில் மாநிலப் பெயர்களிலான அணிகள் ஆடினாலும் அந்த பிராந்திய கிரிக்கெட்டின் ஆளுமையை அவை கொண்டிருப்பதில்லை. எட்டு ஐ.பி.எல். அணிகளுக்கும் வெற்றியை அமைப்பவர்கள் உள்ளூர் வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. சர்வதேசர்கள் வெற்றிப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள்; திசைகாட்டிகள். பல்லக்கைத் தூக்கிச் செல்லும் கால்கள் உள்ளூர் வீரர்களுடையவை. பல்வேறு பிரதேசங்களின் சிறந்த உள்ளூர் ஆட்டக்காரர்களைத் தன் அணியில் ஒன்று திரட்டி உள்ள அணிகள் இதுவரை நன்றாக ஆடியுள்ளன. ஏனெனில் தம் சொந்த பிராந்திய அணியில் இடம் பெற்று சோபித்துள்ள ஆட்டக்காரர்கள் ஓஜா மற்றும் பாண்டே போன்று மிகச் சிலரே. இந்தக் கலப்பு அடையாளம் ஐ.பி.எல்.லுக்கு எதிர்பாராமையையும் அதிரடித் தன்மையையும் வழங்கி உள்ளது. உதாரணமாக, இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த மாநில அணி மும்பை. அதிகமுறை ரஞ்சி தொடர் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது மும்பை தான். ஐ.பி.எல்.லில் மும்பை அணி வெளிநாட்டவரின் இறக்குமதி இன்றி அப்படியே மும்பை இந்தியர்களாக ஆடியிருந்தாலும் சிறப்பாகப் போராடியிருக்கும். ஒருவேளை கணிசமான வெற்றிகளையும் பெற்றிருக்கும். ஆனால் முதல் இரு ஐ.பி.எல்.களில் அகர்கர், பவார், ஜாபர், ரோஹித், சஹீர் உள்ளிட்ட வீரர்கள் வேறுபல அணிகளுக்காக ஆடினர். மூன்றாவது ஐ.பி.எல்.லில் மும்பை அணி தனது பிராந்திய சாராம்சத்தை முழுக்க இழந்து பிற மாநில அணி வீரர்களைப் பிரதானப்படுத்தி நிற்கிறது. சுவாரஸ்யமாக இப்படித் தன் பிராந்திய அடையாளத்தை துறந்துள்ளது அவ்வணியை வலுப்படுத்தி உள்ளது. தற்போது ரெஹானே, நாயர் மற்றும் குல்கர்னியைத் தவிர மும்பை அணியின் அசலான வீரர்கள் வெவ்வேறு ஐ.பி.எல். அணிகளில் ஆடி வருகின்றனர். ஐ.பி.எல் 2010-இன் முதல் ஆட்டத்தில் இம்மூவரும் பங்கேற்கவில்லை. சர்வதேசர்களோ உள்ளூர்க்காரர்களோ அல்ல, ஹைதராபாதின் ராயுடு, ஜார்க்கண்டின் சவுரப் திவாரி மற்றும் தமிழகத்தின் சதீஷ் ஆகியோர் தாம் மும்பையின் முதல் ஆட்டத்தை தன்னம்பிக்கை மற்றும் துடிப்புடன் ஆடி வென்று அளித்தவர்கள். முதல் இரண்டு ஐ.பி.எல்.களில் மும்பைக்காரர்களிடம் இந்தக் குணாதிசயங்கள் வெளிப்படவில்லை. ஏனெனில் மும்பை அணியின் பாரம்பரிய ஆட்டமுறை நிதானம், பொறுமை மற்றும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டது. வெளி மாநிலத்தவர் வந்த உடன் மும்பையின் மட்டையாட்டம் மேலும் அதிரடியாக, பயமற்றதாக மாறிவிட்டது. மும்பையை ஒரு அசலான T20 அணியாக்கி உள்ளது ஹைதராபாதியும், ஜார்க்கண்ட் இளைஞனும், கூட ஒரு தமிழனும் என்பது சுவாரஸ்யமான சேதி. 2010 மும்பை இந்தியர்கள் பெயர் அளவில் மட்டுமே இந்தியர்கள்.

முரணாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணியில் ரெய்னா மற்றும் பார்த்தீவைத் தவிர வேறு சிறப்பான வெளிமாநில ஆட்டக்காரர்களை வாங்கவில்லை. ஐ.பி.எல். அணிகளிலேயே சொந்த மாநில வீரர்களை அதிகம் சார்ந்துள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்: 11 தமிழர்கள். இந்த எதிர்-ஐ.பி.எல். பிராந்திய-சார்பு குணாம் சம்தான் இவ்வணியின் பெரும் பலவீனம். தமிழக வீரர்கள் இயல்பில் சம்பிரதாய ஆட்டக்காரர்கள். மட்டையாட்டத்தில் அனிருத்தா மட்டுமே விதிவிலக்கு. கார்த்திக் மற்றும் அபினவ் ஆகியோர் ஒப்பீட்டளவில் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் T20 தேவைக்குத் தங்களைத் தகவமைக்க முடியுமா என்று தெரியவில்லை. முரளி விஜய் மற்றும் பத்ரிநாத்தின் இயல்புக்கு முற்றிலும் மாறுபட்டது T20 கோரும் வேகமும், விதிகளைப் பறக்க விடும் கற்பனையும். தமிழக அணி உள்ளூர் T20 தொடரை வென்றுள்ளது என்றாலும் ஐ.பி.எல்.லின் தரம் முழுக்க வேறானது. இப்படியான பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி அணியில் ஆடக்கூடிய 7 உள்ளூர்க்காரர்களில் ஐந்து பேர் பெரும்பாலும் T20 திறன்கள் பெறாத தமிழக வீரர்களாகவே இருப்பர். மும்பையைப் போல சென்னை அணியும் வரும் ஐ.பி.எல்.களில் தனது பிராந்திய கற்பை இழக்க வேண்டும். அது வலிமையாகத் திரும்ப அதுவே வழி.

முதல் ஐ.பி.எல். முடியும் தறுவாயில் மாநில அடையாளத்தைக் கறாராகக் கடைப்பிடிக்கும் வகையில் அணிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்படியான போக்கு ஐ.பி.எல்.லின் குணாம்சத்துக்கு மாறுபட்டதாகவே அமையும். இந்த வேரற்ற தன்மை ஐ.பி.எல்.லுக்குள் இயங்கும் ஒரு உலகமயமாக்கல் இழுப்பு விசையாகவும் இருக்கலாம்.

வளர்ந்து வரும் இந்தியாவில் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக, பொருளாதார தளங்களில் அன்னிய மாநிலத்தவரின், மொழியினரின், இனத்தவரின் மேலாதிக்கம் ஒரு புகைச்சலை, நிராசையை, வெறுப்பை உள்ளூர்க்காரர்களிடம் ஏற்படுத்தி உள்ளது; இது சிலசமயம் வன்முறையாக, அரசியல் இயக்கங்கள் மற்றும் எழுச்சிகளாக வெளிப்படுவதைப் பார்த்து வருகிறோம். ஐ.பி.எல். எனும் வணிக கலாச்சாரம் இந்த மாநில நிறபேதங்களை, அடையாள முரண்பாடுகளை ஒரு நெருடலற்ற கேளிக்கை ஆக்கி விட்டது. ஒரு பால் தாக்கரேவோ ராஜ் தாக்கரேவோ வெளியேற்ற கோஷங்கள் இடக்கூட வாய்ப்பு தராதபடி ஒரு கலைடாஸ்கோப் தோற்றத்தை தருகின்றன இந்தக் கலப்பு அணிகளும், அவற்றைத் தாங்கும் கார்ப்பரேட் வெளியும்.

THanks R.Abilash uyirmmai

Monday, June 14, 2010

ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம்

முற்றிலும் வித்தியாசமான சுற்றுச்சூழல் கொண்ட- இயற்கை வெப்பமும் ஆழ்ந்த மனித உணர்ச்சிகளின் கொதிகளனுமாக இருந்த அமெரிக்க தென் கிழக்கு மாநிலங்களில் 30களின் மகத்தான பொருளாதாரத் தேக்ககால பின்புலத்தில் ஒரு கதை பிறந்தால் எப்படி இருக்கும்? மனத்தை மட்டும் உலுக்காது- பூமி நடுங்கும் . பூகம்பம் வெடிக்கும்.

அமெரிக்காவில் இந்தக் கோடை முழுவதும் ஐம்பது ஆண்டுகள் முன்பு பெறும் சலசலப்பை ஏற்படுத்திய அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நூலகர்கள் வாழ்நாளுக்குள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் என்று சிலாகிக்கப்பட்ட புத்தகம். படிக்கவேண்டிய மிக முக்கியமான 10 புத்தகங்கள் பட்டியலில் பைபிள், ஜேன் ஆஸ்டினின் ப்ரைட் அண்ட் ப்ரஜுடிஸ், ஆர்வெல்லின் '84 போன்ற புத்தகங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த புத்தகம்- ‘To Kill a Mocking Bird’ 1960- ஜூலை மாதம் அமெரிக்காவில் வெளிவந்தது. '62-ல் திரைப்படமாக்கப்பட்டது. மனத்தை நெகிழவைக்கும் பிரதான பாத்திரத்தில் க்ரெகரி பெக் அற்புதமாக நடித்திருக்கிறார். சிறந்த படத்துக்கான ஆஸ்காரைப் பெற்ற கதை. ஆசிரியருக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ பரிசும் அமெரிக்க அதிபரின் விடுதலை விருதும் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் வேறு புத்தகமே எழுதவில்லை. இன்னமும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உலகம் எங்கும் பேசப்படுகிறது. பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் சர்ச்சிக்கப்படுகிறது. வெளிவந்த காலத்திலிருந்து ஆண்டுக்குப் பத்து லட்சம் படிகள் விற்பனை ஆகின்றன. 40 மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்ற நாவல். ஜூலையிலிருந்து துவங்கி மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா முழுவதும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியும் திரைப்படக் காட்சிகளும் நடத்தப்படும்.

ஆனால் அதன் ஆசிரியர் ஹார்பர் லீ என்ற பெண் கூச்சத்துக்குப் பேர் போனவர். விளம்பரத்தை வெறுப்பவர். தான் எழுதிய மாத்திரத்தில் புத்தகத்துக்குக் கிடைத்த பிரபல்யத்தைக்கண்டு அரண்டு தன்னை மறைத்துக் கொண்டவர். அலபாமாவில் தான் பிறந்த சிறிய கிராமத்தில் ஓய்வு மனையில் வசிக்கும் 84 வயது லீ இந்தக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளமாட்டார் நிச்சயம்.

அத்தகைய பெண் ஒரு மிகத் துணிச்சலான கதைக் கருவைப் பின்னி புத்தகம் வெளிவந்த உடனடியாக உலகின் பார்வைக்கு வந்தது அதிசயம்தான். இனவாதத்தை மையமாகக் கொண்ட –‘To Kill A Mocking Bird-‘ அமெரிக்காவின் தேசியப் புதினமாகக் கருதப்படுகிறது. அதிகத் துறுதுறுப்புடன் இருந்த ஒரு சிறுமியின் பார்வையில் நகைச் சுவையும் அங்கதமும் இழையோட மிகக் கனமான கதைப் பொருளை மிக லாவகமாக உணர்ச்சிப் பெருக்கில்லாமல் கோஷமில்லாமல் சொல்லப்பட்டிருப்பதே நாவலின் பலம். நட்புகள், குடும்ப உறவுகள், குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்துக்கு வளரும் காலகட்டம் இவற்றிற்கு இடையே சிறுமி தான் காணும் இனவாதத்தையும் கருப்பர்களுக்கு இழக்கப்படும் அநீதியையும் முதியவர்களின் அரசியல் பார்வையில் அல்லாமல், அப்பாவித்தனமாக உணர்ந்து அதிர்வதும் மனத்தளவில் வளர்வதும் மிக இயல்பாக வெளிப்படுகிறது. கருப்பர்களின் ஸிவில் ரைட்ஸ் போராட்டத்தின் இறுதியில் சரியான தருணத்தில் வந்த நாவல். படித்த வெள்ளையருக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்திற்று. கருப்பர்கள் பலருக்கு கருப்பர் பாத்திரம் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாக அதிருப்தி ஏற்பட்டது.

மேகோம்ப் என்ற சிறிய கிராமம். அங்கு ஸ்கௌட் என்ற சிறுமியும் அவளைவிட நான்கு வயதுப் பெரியவனான அண்ணன் ஜெம்மும் மனைவியை இழந்த தந்தையும் வழக்கறிஞருமான அட்டிக்கஸ் ஃபின்சுடன் வசிக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தில் என்ற ஒரு சிறுவன் அவளுக்கு நண்பன். அசாத்திய கற்பனைத்திறனும் ஆர்வமும் உள்ளவன். ஸ்கௌட் அவனுக்கு சரியான ஜோடி. இன்னொரு பக்கத்து

வீட்டில் ஒரு மர்ம மனிதர் யார் கண்ணிலும் படாமல் வசிக்கிறார். அவரைப்பற்றின கற்பனைக் கதைகளை இருவரும் பின்னுவதில் மும்முரமாகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மரத்தடியில் சில பரிசுப்பொருள்களை அவர் விட்டுச் செல்வதை அவர்கள் பின்னால் உணர்ந்து வியக்கிறார்கள். கதையின் முக்கியமான பகுதி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு. ஒரு கருப்பர்,டாம் ராபின்சன், ஒரு வெள்ளைப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அநியாயமாகப் பழிசுமத்தப்பட்டிருக்கிறான். நேர்மையும் மனித நேயம் மிக்கவருமான அட்டிக்கஸ் ஃபின்ச் டாமுக்காக வாதிட ஆஜராகிறார். கிராமத்து வெள்ளையர்கள் அவரை ஏசுகிறார்கள். சாட்சியங்கள் டாம் குற்றமற்றவன் என்று தெளிவாகக் காட்டியும் ஜூரி அவனுக்கு மரண தண்டனை அளிக்கிறார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற டாம் கடைசியில் சுடப்பட்டு இறந்து போகிறான். கருப்பரின் மேல் பழிசுமத்திய வெள்ளைப் பெண்ணின் தந்தை அட்டிக்கஸ்ஸைப் பழிவாங்கும் வெறியில் அலைகிறார். குழந்தைகளையும் துரத்தி தாக்கவரும் சமயத்தில் பக்கத்து வீட்டு மர்ம மனிதர் அவர்களைக் காப்பாற்றுகிறார்.





'Mocking bird' எனும் பறவை யாருக்கும் தீங்கு செய்யாதது , அதைக் கொல்வது பாவம் என்று ஸ்கௌட்டின் தந்தை ஒரு இடத்தில் சொல்வார். இனவாதப் பழிகளின் அடையாளமாக புத்தகத்தின் உருவகத் தலைப்பாக லீ அதை உபயோகிக்கிறார். இந்த நாவல் கிட்டத்தட்ட அவரது சுய சரிதை என்று சொல்லப்படுகிறது. அவருடைய தந்தையும் கருப்பருக்காக வாதாடிய வழக்கறிஞர். முக்கியமாக ஸ்கௌட்டின் சினேகிதன் தில், லீயின் பால்ய நண்பனான ட்ரூமன் கப்போட்டி என்று சொல்லப்படுகிறது. கப்போட்டியும் லீயும் 60களிலும் நண்பர்களாக இருந்தார்கள் . இருவரும் சேர்ந்து ஒரு மொத்த குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று விவரம் சேகரித்த கதை சுவாரஸ்யமானது. ‘In cold blood’ என்ற புத்தகத்தை கப்போட்டி எழுதி புகழ்பெற்ற விதமும் அது ஏற்படுத்திய பாதிப்பும் அற்புதமாக ட்ரூமன் கப்போட்டி என்ற தலைப்பில் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறது. அதில் ஹார்ப்பர் லீயின் பாத்திரமும் உண்டு. கப்போட்டி லீயின் புகழைக்கண்டு பொறாமைப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

‘In cold blood’க்கான ஆய்வு கப்போட்டியின் மனநிலையை வெகுவாகப் பாதித்தது. லீயைப் பிறகு அவர் சந்திக்கவே இல்லை.

லீயின் புத்தகத்துடன் ‘புக்கர்’ பரிசு பெற்ற அருந்ததி ராய் சம்பந்தப்படுத்தப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். அது வேறு சர்ச்சை.

Sunday, June 13, 2010

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில்,பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்குத் தகவல் கிடைத்தது.

என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர்,என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை.' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி,கோட்ஃபாதரிடம் கூறினார்.

தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்.'சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டிப் புதைத்திருக்கிறேன்.' என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?" கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார்.அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனைச் சுட்டுத் தள்ளட்டுமாம்.அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்குத் தைரியமில்லையாம்."

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில்,பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்குத் தகவல் கிடைத்தது.

என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர்,என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை.' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி,கோட்ஃபாதரிடம் கூறினார்.

தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்.'சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டிப் புதைத்திருக்கிறேன்.' என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?" கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார்.அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனைச் சுட்டுத் தள்ளட்டுமாம்.அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்குத் தைரியமில்லையாம்."

சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்": தனிமையும் எந்திர நட்பும்

மே 24 மாலை ஏழு மணிக்கு சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் சென்னை கிருஷ்ணகான சபாவில் குருகுலம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இயக்குனர் மற்றும் மையப்பாத்திரமாக நடித்தவர் எம்.பி.மூர்த்தி. எம்.பி மூர்த்தி பயங்கர தன்னடக்கவாதி. எந்தளவுக்கு என்றால் தொடர்பு கொண்டு கேட்டபோது நாடகத்தை இயக்கியது தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்தார்; ஒரு மாந்த்ரீக எதார்த்த பாணியில்,மறைந்த பூர்ணம் விஸ்வனாதன் தான் இயக்கினார் என்று தெரிவித்தார்.அவர் பூர்ணமின் ஆத்மீக வழிகாட்டலை உத்தேசித்திருக்கக் கூடும்.இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விஸ்வநாதனின் New Theatre-ஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட ஒன்று.

"கடவுள் வந்திருந்தார்" அறிவியல் புனைவின் பூச்சு கொண்ட சமூக பகடி இந்நாடகம். ஒரு நகைச்சுவை நாடகமாக இது முழுமையான கேளிக்கை அனுபவத்தையும் தரலாம். ஒரு தனிமனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள ஆதமார்த்தமான தனிமையை உணர்ந்து கொள்ளும் பிரச்சினையும் பேசப்படுகிறது. அந்நிலையின் வெறுமையை, கசப்பை,கைவிடப்படலைப் பேசும் சூட்சுமமான பகுதி வெளிப்படையாகக் காட்டப்பட இல்லை என்பதே சுஜாதாவின் மிகப்பெரிய சாமர்த்தியம்.அதாவது மையப்பாத்திரமான ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற பின் சிறுகச் சிறுக குடும்ப உறவுகளின் மரியாதையை, சமூக பயன்பாட்டு வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து வரும் மனிதர். துயரம் என்னவென்றால் அவர் அதை மிக துல்லியமாய் உணர்ந்து கொள்கிறார் அல்லது மிகச் சரியாக ஏற்கனவே எதிர்பார்த்து இருந்துள்ளார். தீமையைப் போன்று தனிமை நம் வெகுஅருகில் எப்போதுமே காத்திருக்கிறது. மிகப்பலர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனது இடம் காலியாக உள்ளதை, அதன் விளைவாக தனிமைப்பட்டுப் போவதை உள்ளார்ந்து உணர்வதில்லை. உணர்ந்தால் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இந்நாடகத்தில் ஸ்ரீனிவாசனுக்கு வேலையில் இருந்து ஓய்வு தனது உள்ளார்ந்த தனிமையைச் சுட்டும் போதிமரமாக உள்ளது. அவர் கிடைக்கிற பொழுதில், மனைவி, மகள் இல்லாத வீட்டின் தனிமையில், சுஜாதா (நாடகத்துள் வரும் எழுத்தாளர்)எழுதிய "எதிர்காலமனிதன்" என்ற விஞ்ஞான புனைகதையைப் படிக்கிறார்.இங்கே ஸ்ரீனிவாசன் படிப்பது செய்தித்தாளோ, எளிய பாகவத சுருக்கமோ அல்ல என்பது முக்கியம்.

அறிவியல் புனைவுகளில் கணிசமானவை விண்வெளி மனிதன் பற்றிய அலாதியான கற்பனை சித்திரங்களால் உருவாக்கப்பட்டவை. வெறுமனே விண்வெளியின் தன்மை என்றல்லாமல், விண்வெளியின் உயிர் சாத்தியப்பாடுகளே அறிவியல் புனைவிலக்கியம் அல்லது விண்வெளி ஆய்வின் ஒரு பிரதான தேடலாக உள்ளது. தனது கட்டுரை ஒன்றில் இந்தத் தேடலைப் பற்றி அவதானிக்கும் சுஜாதா அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வு, கோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாகச் சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம் என்கிறார். இந்த விண்வெளித் தனிமையை ஜீரணிக்க முடியாமல்தான் மனிதன் ஒரு சக-கோள உயிரைக் கற்பிக்கவோ கண்டறியவோ முனைகிறான்.ஸ்ரீனிவாசன் படிக்கும் அறிவியல் புனைகதையில் காலப் பயணம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. அதாவது 2080இல் மனிதன் கால-எந்திரங்களில் எந்த நூற்றாண்டுக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியலாம். அப்படியான ஒரு மனிதன் இந்த நூற்றாண்டுக்கு வந்தால் அவனிடம் எதிர்காலம் குறித்து, அம்மனிதர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறித்து விசாரிக்கலாமே என்று அவர் சத்தமாக யோசிக்கிறார். அப்போது 2080இல் இருந்து ஒரு மனிதன் நிஜமாகவே இந்த நூற்றாண்டுக்கு ஒரு கால-எந்திரத்தில் வந்து அவர் வீட்டுக்குள் குதித்து விடுகிறான். அவனால் உருவாகும் சிக்கல்களும், குழப்பங்களுமே நாடகத்தின் பிற அங்கங்களை நகர்த்துகின்றன. உறவாட ஒரு எதிர்கால மனிதன் வரும் அளவுக்கு முதியவர் வாழ்வின் விளிம்புக்கு நகர்த்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் எதிர்கால மனிதன் மீது வெறுப்பு காட்டி, அவனைத் துரத்த முயன்றாலும் அவன் மீது அவர் கொள்ளும் தீவிர பிடிப்பு ஒவ்வொரு காட்சியினூடும் சுஜாதாவால் நுட்பமாகக் காட்டப்படுகிறது. முதியவர் ஆரம்பத்தில் எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மனிதப்பெயர் வைக்க வேண்டுகிறார். எண்கள் மட்டுமே அடையாளமாய் கொண்ட எ.கா.மனிதனுக்கு ஜோ என்று பெயர் முடிவாகிறது. பூஜை மணியால் ஒரு முறை கிணுக்கினால் அவன் தோன்ற வேண்டும் . இரண்டு முறை என்றால் அவன் மறைந்து விட வேண்டும். பிறர் முன்னிலையில் அவனிடம் பேசுவது சங்கடமாகவும், பிரச்சினைகள் தருவதாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு என்கிறார் ஸ்ரீனிவாசன். அதனால அவர் தனியாக இருக்கும் போது ஒரு மணிச்சத்தம் எழுப்புவார். ஜோ "தனியா என்றால் என்ன" என்கிறான்.தனது அகராதியில் தேடி அது ஒரு மளிகைப் பொருளாச்சே என்கிறான்.முதிய்வர் "இல்லை இல்லை, இது lonely" என்கிறார். "இங்கே எல்லாரும் லோன்லில் லோன்லி தான் " என்கிறார் மேலும். இது நாடகத்தின் சாவி போன்ற வசனம். இறுதியில் எ.கா. மனிதன் தன் காலத்துக்குத் திரும்ப வேண்டி வருகையில் ஸ்ரீனிவாசன் தடுமாறிப் போகிறார். அவனைத் தடுக்க,மேலும் தங்கிட வைக்கப் போராடுகிறார். அவன் கிளம்பின உடன் பழைய மணியை எடுத்து அடித்துப் பார்க்கிறார். இந்தக் கையறு நிலைமை நாடகத்தின் மையக் கரு. .கா. மனிதனால் விளையும் லௌகீகப் பயன்களை முதியவர் தன்னுடைய சுயவசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய பிரிவு ஒரு லௌகீக் இழப்பல்ல.ஆதமார்த்த நிலையில் தனக்கான ஒரு பிடிப்பை, அணுக்கமான இருப்பை,பாசாங்கற்ற உறவை இழந்து விட்டதாக உணர்கிறார். இது தான் அவரது பெரும் ஆற்றாமை. அடுத்து ஜோ எனப்படும் இந்த எ.கா. மனிதன் ஒரு மின்சாரம் உண்டு வாழும், கணினியால் இயக்கப்படும் எந்திரம் என்ற குறிப்பு சுவாரஸ்யமானது. அதாவது நவீன மனிதன் ஒரு எந்திரத்துடன் உறவாடும்படியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளான் என்பது எத்தனை முக்கியமான அவதானிப்பு! இந்த நெருக்கடியின் உருவகம்தான் ஸ்ரீனிவாசன். அவர் ஒரே நிலையில் மக்களால் பைத்தியமாகவும் கடவுள் அவதாரமாகவும் பார்க்கப்படுகிறார். இந்த முரண்பாடுகளால் பிளவுபடும் சமூகமும் வேறொரு நிலையில் தனிமைப்பட்டு தான் உள்ளது.அறுபதுகளில் எந்திர விலைமாதுகள், மீடியா சாமியார்கள் மற்றும் விர்ச்சுவல் காமப் பரிவர்த்தனையின் இன்றைய காலகட்டத்தில் சுஜாதா பேசிய இச்சங்கதியை நாம் மேலும் மேலும் காத்திரமாக உணர்ந்து வருகிறோம்.

நாடகம் முழுக்க ஸ்ரீனிவாசன் பேசும் தன்னுரைகள் மேலும் முக்கியமானவை. அவர் எ.கா. மனிதனிடம் பேசும்போது அடுத்தவர்களுக்கு அவனது உருவமோ, குரலோ பார்க்க முடியாது,கேட்காது. இதனால் முதியவ்ர் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய் தவறாய்ப் புரிந்துகொண்டு அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டுகின்றனர். இந்த "பைத்திய" வசனங்களும் ஒருவித தன்னுரைகள்தாம். அடுத்து ஸ்ரீனிவாசனின் அறிவார்ந்த நகைச்சுவை வசனங்கள். சதா தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் போலித்தனங்களை,அசட்டு பாவனைகளைப் பகடி செய்து கொண்டே போகிறார். அவரது நெருக்கடிகள் தீவிரம் ஆக ஆக இந்தப் பகடியும் கேலியும் மிகுதியாகியபடி செல்கின்றன. இது ஏன்? மக்கள் ஏன் உண்மையைத் தொடர்ந்து மறுக்கிறார்கள் என்ற வருத்தமே இந்த நகைச்சுவை தோலுரிப்பில் வெளிப்படுகிறது. ஒரு துன்பியல் பாத்திரமாக அவர் தோற்றம் கொள்ளாமல் காப்பாற்றுவது இந்த அங்கதச்சுவை மிக்க வசனங்கள்தாம்.ஸ்ரீனிவாசனின் துயரம் கண்டு பார்வையாளன் உள்ளார்ந்து நுட்பமாய் இரங்கி, மனம் கலங்கினாலும் அவன் காணும் பிரதான ரசம் வேடிக்கையும்,மகிழ்ச்சியும்தான். மேலோட்டமான தளத்தில் "கடவுள் வந்திருந்தார்" ஒரு எளிய வேடிக்கை நாடகமாக, horse play-ஆக தெரிவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. மருத்துவர், போலீஸ், காதலன், காது டமாரமான கிழம் என்று தட்டையான, தேய்வழக்கு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சந்தர்ப்பங்கள் ஆகியன் உயர்தர நாடகத்துக்கு உரியன அல்ல. ஆனால் ஒரு எளிய ஷெரிடன்,காங்கிரீவ் அல்லது நம்மூர் கிரேசி மோகன் பாணியிலான குணாதிசய நகைச்சுவை நாடகமாக (comedy of manners) தாழ்ந்து விடாமல் உயர்த்துவது மேற்சொன்ன துன்பியல்-நகைச்சுவை அம்சம்தான். இருக்கையில் இருந்து துள்ளித் துள்ளி சிரித்தவர்களில் நுண்ணுணர்வு கொண்டவர்களை ஆழமாய் அலைக்கழிக்கும் ஒரு இருத்தலியல் துயரம் ஸ்ரீனிவாசனின் வரிகளிலும், அவர் சந்திக்கும் நூதனமான, மிகுகற்பனை சூழல்களிலும் உண்டு. ஆனால் ஒரு தீவிர நாடகத்தின் எந்தத் தோற்றமும் ஏற்பட்டு விடாமல் சுஜாதா கவனமாக எழுதியுள்ளார்.

நகைச்சுவை நாடகம் சூழ்நிலை அல்லது வசனங்களை மையமாகக் கொண்டு இயங்கலாம். சுஜாதா உருவாக்கும் சூழ்நிலைகள் நகைச்சுவை பாந்தமாக எப்போதும் இருப்பதில்லை. குறிப்பாக, இந்நாடகத்தில் சாமர்த்தியமான மதிநுட்ப நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள்தான் அவரது பலவீனமான காட்சியமைப்புகளைத் தாங்கி நிறுத்துகின்றன. சூழல் ரீதியான நகைச்சுவையில் வசனம் மழுங்கினாலும், நடிகர்கள் சிறிது சொதப்பினாலும் கூட காட்சியமைப்பின் சிறப்பு பார்வையாளனை சிரிப்பில் ஆழ்த்தும். பார்வையாளன் காட்சியின் தன்மையை எண்ணி அனுபவிப்பதால் நடிகர்கள் சும்மா முட்டுக் கொடுத்தாலே அவ்விடம் வெற்றியடையும். ஆனால் வசனம்-சார் நகைச்சுவையில் நடிகர்களின் டைமிங் மிக முக்கியம். பொதுவாக நடிப்பில் பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும் இந்நாடகத்தில் நடித்தவர்கள் டைமிங் மற்றும் குரலின் ஏற்ற இறக்கம் போன்ற வெளிப்பாட்டுகளில் சோபித்தார்கள். ஸ்ரீனிவாசனாக நடித்த எம்.பி. மூர்த்தி மற்றும் மருத்துவராக நடித்த விஸ்வனாதன் ரமேஷை இவ்விசயத்தில் பாராட்ட வேண்டும். வினோதமாக சில்லறை பாத்திரங்களில் இயங்கினவர்களே மிக நன்றாக நடித்தார்கள். குறிப்பாக,செவிட்டு மாமனார் பாத்திரத்தில் நடித்த விஷ்ணு மற்றும் பக்கத்து வீட்டு சேஷகிரி ராவாக வந்த ஆர்.பாஸ்கர். இருவருக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டில் கட்டுப்பாடும் தேர்ச்சியும் இருந்தது. எம்.பி. மூர்த்திக்கு சிறு இடைவேளைகளும், பார்வையாளரை நோக்கி பிரசங்கிக்க வேண்டிய கட்டங்களும் சோதனைகள்தாம்..இப்படி கியர் மாற வேண்டிய தருணங்களில் பிரக்ஞைபூர்வமாகி விடுவார். உக்கிரமான கட்டங்களில் நன்றாகவே நடித்தார். ஆனால் வெளிவந்ததும் உடனே வேறுபட்ட காட்சிக்கான மனநிலைக்குச் செல்ல முடியாமல் தத்தளித்தார், சுத்த தமிழ் உச்சரிப்பை விட பிராமணத் தமிழ் பேசும் இடங்களில்தான் மிக சரளமாக நடித்து ஸ்ரீனிவாசன் பாத்திரத்துக்கு அவர் ஒரு தனி அடையாளமே தந்து விடுகிறார். குறிப்பாக, அவர் முகத்தை தொங்கப் போட்டபடி,அமர்த்தலான தொனியில் பேசும் தோரணை இந்தப் பாத்திரத்தைப் பற்றிய ஒரு நடிகருக்கான சிறந்த அவதானிப்பு எனலாம்.. ஆனால் பிற பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பு பிரக்ஞைபூர்வமாகவும் அதனால் சொதப்பலாகவும் இருந்தது. மகள் பாத்திரத்தில் வசுமதியாக நடித்தவர் ஷாந்தி கணேஷ். ‘பிதாமகனில் வில்லனுக்கு மனைவியாக வந்தவர்.அவர் நடிப்பு தான் உள்ளதிலேயே கடுமையான விஷப்பரீட்சையாக இருந்தது. எழுபதுகளில் பூர்ணம் விஸ்வநாதனுடன் இயங்கிய நடிகர் குழு தான் இம்முறையும் நடித்திருந்ததால் பாத்திர அமைப்புக்குப் பொருத்தமற்ற தோற்றம் ஒரு நெருடலாகவே இருந்தது. இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்தது அம்பியாக நடித்த சிறுவன் மட்டும்தான்.

சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்": தனிமையும் எந்திர நட்பும்

மே 24 மாலை ஏழு மணிக்கு சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் சென்னை கிருஷ்ணகான சபாவில் குருகுலம் குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இயக்குனர் மற்றும் மையப்பாத்திரமாக நடித்தவர் எம்.பி.மூர்த்தி. எம்.பி மூர்த்தி பயங்கர தன்னடக்கவாதி. எந்தளவுக்கு என்றால் தொடர்பு கொண்டு கேட்டபோது நாடகத்தை இயக்கியது தான் என்பதை ஒத்துக் கொள்ள மறுத்தார்; ஒரு மாந்த்ரீக எதார்த்த பாணியில்,மறைந்த பூர்ணம் விஸ்வனாதன் தான் இயக்கினார் என்று தெரிவித்தார்.அவர் பூர்ணமின் ஆத்மீக வழிகாட்டலை உத்தேசித்திருக்கக் கூடும்.இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விஸ்வநாதனின் New Theatre-ஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட ஒன்று.

"கடவுள் வந்திருந்தார்" அறிவியல் புனைவின் பூச்சு கொண்ட சமூக பகடி இந்நாடகம். ஒரு நகைச்சுவை நாடகமாக இது முழுமையான கேளிக்கை அனுபவத்தையும் தரலாம். ஒரு தனிமனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள ஆதமார்த்தமான தனிமையை உணர்ந்து கொள்ளும் பிரச்சினையும் பேசப்படுகிறது. அந்நிலையின் வெறுமையை, கசப்பை,கைவிடப்படலைப் பேசும் சூட்சுமமான பகுதி வெளிப்படையாகக் காட்டப்பட இல்லை என்பதே சுஜாதாவின் மிகப்பெரிய சாமர்த்தியம்.அதாவது மையப்பாத்திரமான ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற பின் சிறுகச் சிறுக குடும்ப உறவுகளின் மரியாதையை, சமூக பயன்பாட்டு வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து வரும் மனிதர். துயரம் என்னவென்றால் அவர் அதை மிக துல்லியமாய் உணர்ந்து கொள்கிறார் அல்லது மிகச் சரியாக ஏற்கனவே எதிர்பார்த்து இருந்துள்ளார். தீமையைப் போன்று தனிமை நம் வெகுஅருகில் எப்போதுமே காத்திருக்கிறது. மிகப்பலர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனது இடம் காலியாக உள்ளதை, அதன் விளைவாக தனிமைப்பட்டுப் போவதை உள்ளார்ந்து உணர்வதில்லை. உணர்ந்தால் கூட ஏற்றுக் கொள்வதில்லை. இந்நாடகத்தில் ஸ்ரீனிவாசனுக்கு வேலையில் இருந்து ஓய்வு தனது உள்ளார்ந்த தனிமையைச் சுட்டும் போதிமரமாக உள்ளது. அவர் கிடைக்கிற பொழுதில், மனைவி, மகள் இல்லாத வீட்டின் தனிமையில், சுஜாதா (நாடகத்துள் வரும் எழுத்தாளர்)எழுதிய "எதிர்காலமனிதன்" என்ற விஞ்ஞான புனைகதையைப் படிக்கிறார்.இங்கே ஸ்ரீனிவாசன் படிப்பது செய்தித்தாளோ, எளிய பாகவத சுருக்கமோ அல்ல என்பது முக்கியம்.

அறிவியல் புனைவுகளில் கணிசமானவை விண்வெளி மனிதன் பற்றிய அலாதியான கற்பனை சித்திரங்களால் உருவாக்கப்பட்டவை. வெறுமனே விண்வெளியின் தன்மை என்றல்லாமல், விண்வெளியின் உயிர் சாத்தியப்பாடுகளே அறிவியல் புனைவிலக்கியம் அல்லது விண்வெளி ஆய்வின் ஒரு பிரதான தேடலாக உள்ளது. தனது கட்டுரை ஒன்றில் இந்தத் தேடலைப் பற்றி அவதானிக்கும் சுஜாதா அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வு, கோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாகச் சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம் என்கிறார். இந்த விண்வெளித் தனிமையை ஜீரணிக்க முடியாமல்தான் மனிதன் ஒரு சக-கோள உயிரைக் கற்பிக்கவோ கண்டறியவோ முனைகிறான்.ஸ்ரீனிவாசன் படிக்கும் அறிவியல் புனைகதையில் காலப் பயணம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. அதாவது 2080இல் மனிதன் கால-எந்திரங்களில் எந்த நூற்றாண்டுக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியலாம். அப்படியான ஒரு மனிதன் இந்த நூற்றாண்டுக்கு வந்தால் அவனிடம் எதிர்காலம் குறித்து, அம்மனிதர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் குறித்து விசாரிக்கலாமே என்று அவர் சத்தமாக யோசிக்கிறார். அப்போது 2080இல் இருந்து ஒரு மனிதன் நிஜமாகவே இந்த நூற்றாண்டுக்கு ஒரு கால-எந்திரத்தில் வந்து அவர் வீட்டுக்குள் குதித்து விடுகிறான். அவனால் உருவாகும் சிக்கல்களும், குழப்பங்களுமே நாடகத்தின் பிற அங்கங்களை நகர்த்துகின்றன. உறவாட ஒரு எதிர்கால மனிதன் வரும் அளவுக்கு முதியவர் வாழ்வின் விளிம்புக்கு நகர்த்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் எதிர்கால மனிதன் மீது வெறுப்பு காட்டி, அவனைத் துரத்த முயன்றாலும் அவன் மீது அவர் கொள்ளும் தீவிர பிடிப்பு ஒவ்வொரு காட்சியினூடும் சுஜாதாவால் நுட்பமாகக் காட்டப்படுகிறது. முதியவர் ஆரம்பத்தில் எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். மனிதப்பெயர் வைக்க வேண்டுகிறார். எண்கள் மட்டுமே அடையாளமாய் கொண்ட எ.கா.மனிதனுக்கு ஜோ என்று பெயர் முடிவாகிறது. பூஜை மணியால் ஒரு முறை கிணுக்கினால் அவன் தோன்ற வேண்டும் . இரண்டு முறை என்றால் அவன் மறைந்து விட வேண்டும். பிறர் முன்னிலையில் அவனிடம் பேசுவது சங்கடமாகவும், பிரச்சினைகள் தருவதாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு என்கிறார் ஸ்ரீனிவாசன். அதனால அவர் தனியாக இருக்கும் போது ஒரு மணிச்சத்தம் எழுப்புவார். ஜோ "தனியா என்றால் என்ன" என்கிறான்.தனது அகராதியில் தேடி அது ஒரு மளிகைப் பொருளாச்சே என்கிறான்.முதிய்வர் "இல்லை இல்லை, இது lonely" என்கிறார். "இங்கே எல்லாரும் லோன்லில் லோன்லி தான் " என்கிறார் மேலும். இது நாடகத்தின் சாவி போன்ற வசனம். இறுதியில் எ.கா. மனிதன் தன் காலத்துக்குத் திரும்ப வேண்டி வருகையில் ஸ்ரீனிவாசன் தடுமாறிப் போகிறார். அவனைத் தடுக்க,மேலும் தங்கிட வைக்கப் போராடுகிறார். அவன் கிளம்பின உடன் பழைய மணியை எடுத்து அடித்துப் பார்க்கிறார். இந்தக் கையறு நிலைமை நாடகத்தின் மையக் கரு. .கா. மனிதனால் விளையும் லௌகீகப் பயன்களை முதியவர் தன்னுடைய சுயவசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அவனுடைய பிரிவு ஒரு லௌகீக் இழப்பல்ல.ஆதமார்த்த நிலையில் தனக்கான ஒரு பிடிப்பை, அணுக்கமான இருப்பை,பாசாங்கற்ற உறவை இழந்து விட்டதாக உணர்கிறார். இது தான் அவரது பெரும் ஆற்றாமை. அடுத்து ஜோ எனப்படும் இந்த எ.கா. மனிதன் ஒரு மின்சாரம் உண்டு வாழும், கணினியால் இயக்கப்படும் எந்திரம் என்ற குறிப்பு சுவாரஸ்யமானது. அதாவது நவீன மனிதன் ஒரு எந்திரத்துடன் உறவாடும்படியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளான் என்பது எத்தனை முக்கியமான அவதானிப்பு! இந்த நெருக்கடியின் உருவகம்தான் ஸ்ரீனிவாசன். அவர் ஒரே நிலையில் மக்களால் பைத்தியமாகவும் கடவுள் அவதாரமாகவும் பார்க்கப்படுகிறார். இந்த முரண்பாடுகளால் பிளவுபடும் சமூகமும் வேறொரு நிலையில் தனிமைப்பட்டு தான் உள்ளது.அறுபதுகளில் எந்திர விலைமாதுகள், மீடியா சாமியார்கள் மற்றும் விர்ச்சுவல் காமப் பரிவர்த்தனையின் இன்றைய காலகட்டத்தில் சுஜாதா பேசிய இச்சங்கதியை நாம் மேலும் மேலும் காத்திரமாக உணர்ந்து வருகிறோம்.

நாடகம் முழுக்க ஸ்ரீனிவாசன் பேசும் தன்னுரைகள் மேலும் முக்கியமானவை. அவர் எ.கா. மனிதனிடம் பேசும்போது அடுத்தவர்களுக்கு அவனது உருவமோ, குரலோ பார்க்க முடியாது,கேட்காது. இதனால் முதியவ்ர் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய் தவறாய்ப் புரிந்துகொண்டு அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டுகின்றனர். இந்த "பைத்திய" வசனங்களும் ஒருவித தன்னுரைகள்தாம். அடுத்து ஸ்ரீனிவாசனின் அறிவார்ந்த நகைச்சுவை வசனங்கள். சதா தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் போலித்தனங்களை,அசட்டு பாவனைகளைப் பகடி செய்து கொண்டே போகிறார். அவரது நெருக்கடிகள் தீவிரம் ஆக ஆக இந்தப் பகடியும் கேலியும் மிகுதியாகியபடி செல்கின்றன. இது ஏன்? மக்கள் ஏன் உண்மையைத் தொடர்ந்து மறுக்கிறார்கள் என்ற வருத்தமே இந்த நகைச்சுவை தோலுரிப்பில் வெளிப்படுகிறது. ஒரு துன்பியல் பாத்திரமாக அவர் தோற்றம் கொள்ளாமல் காப்பாற்றுவது இந்த அங்கதச்சுவை மிக்க வசனங்கள்தாம்.ஸ்ரீனிவாசனின் துயரம் கண்டு பார்வையாளன் உள்ளார்ந்து நுட்பமாய் இரங்கி, மனம் கலங்கினாலும் அவன் காணும் பிரதான ரசம் வேடிக்கையும்,மகிழ்ச்சியும்தான். மேலோட்டமான தளத்தில் "கடவுள் வந்திருந்தார்" ஒரு எளிய வேடிக்கை நாடகமாக, horse play-ஆக தெரிவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. மருத்துவர், போலீஸ், காதலன், காது டமாரமான கிழம் என்று தட்டையான, தேய்வழக்கு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சந்தர்ப்பங்கள் ஆகியன் உயர்தர நாடகத்துக்கு உரியன அல்ல. ஆனால் ஒரு எளிய ஷெரிடன்,காங்கிரீவ் அல்லது நம்மூர் கிரேசி மோகன் பாணியிலான குணாதிசய நகைச்சுவை நாடகமாக (comedy of manners) தாழ்ந்து விடாமல் உயர்த்துவது மேற்சொன்ன துன்பியல்-நகைச்சுவை அம்சம்தான். இருக்கையில் இருந்து துள்ளித் துள்ளி சிரித்தவர்களில் நுண்ணுணர்வு கொண்டவர்களை ஆழமாய் அலைக்கழிக்கும் ஒரு இருத்தலியல் துயரம் ஸ்ரீனிவாசனின் வரிகளிலும், அவர் சந்திக்கும் நூதனமான, மிகுகற்பனை சூழல்களிலும் உண்டு. ஆனால் ஒரு தீவிர நாடகத்தின் எந்தத் தோற்றமும் ஏற்பட்டு விடாமல் சுஜாதா கவனமாக எழுதியுள்ளார்.

நகைச்சுவை நாடகம் சூழ்நிலை அல்லது வசனங்களை மையமாகக் கொண்டு இயங்கலாம். சுஜாதா உருவாக்கும் சூழ்நிலைகள் நகைச்சுவை பாந்தமாக எப்போதும் இருப்பதில்லை. குறிப்பாக, இந்நாடகத்தில் சாமர்த்தியமான மதிநுட்ப நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள்தான் அவரது பலவீனமான காட்சியமைப்புகளைத் தாங்கி நிறுத்துகின்றன. சூழல் ரீதியான நகைச்சுவையில் வசனம் மழுங்கினாலும், நடிகர்கள் சிறிது சொதப்பினாலும் கூட காட்சியமைப்பின் சிறப்பு பார்வையாளனை சிரிப்பில் ஆழ்த்தும். பார்வையாளன் காட்சியின் தன்மையை எண்ணி அனுபவிப்பதால் நடிகர்கள் சும்மா முட்டுக் கொடுத்தாலே அவ்விடம் வெற்றியடையும். ஆனால் வசனம்-சார் நகைச்சுவையில் நடிகர்களின் டைமிங் மிக முக்கியம். பொதுவாக நடிப்பில் பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும் இந்நாடகத்தில் நடித்தவர்கள் டைமிங் மற்றும் குரலின் ஏற்ற இறக்கம் போன்ற வெளிப்பாட்டுகளில் சோபித்தார்கள். ஸ்ரீனிவாசனாக நடித்த எம்.பி. மூர்த்தி மற்றும் மருத்துவராக நடித்த விஸ்வனாதன் ரமேஷை இவ்விசயத்தில் பாராட்ட வேண்டும். வினோதமாக சில்லறை பாத்திரங்களில் இயங்கினவர்களே மிக நன்றாக நடித்தார்கள். குறிப்பாக,செவிட்டு மாமனார் பாத்திரத்தில் நடித்த விஷ்ணு மற்றும் பக்கத்து வீட்டு சேஷகிரி ராவாக வந்த ஆர்.பாஸ்கர். இருவருக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டில் கட்டுப்பாடும் தேர்ச்சியும் இருந்தது. எம்.பி. மூர்த்திக்கு சிறு இடைவேளைகளும், பார்வையாளரை நோக்கி பிரசங்கிக்க வேண்டிய கட்டங்களும் சோதனைகள்தாம்..இப்படி கியர் மாற வேண்டிய தருணங்களில் பிரக்ஞைபூர்வமாகி விடுவார். உக்கிரமான கட்டங்களில் நன்றாகவே நடித்தார். ஆனால் வெளிவந்ததும் உடனே வேறுபட்ட காட்சிக்கான மனநிலைக்குச் செல்ல முடியாமல் தத்தளித்தார், சுத்த தமிழ் உச்சரிப்பை விட பிராமணத் தமிழ் பேசும் இடங்களில்தான் மிக சரளமாக நடித்து ஸ்ரீனிவாசன் பாத்திரத்துக்கு அவர் ஒரு தனி அடையாளமே தந்து விடுகிறார். குறிப்பாக, அவர் முகத்தை தொங்கப் போட்டபடி,அமர்த்தலான தொனியில் பேசும் தோரணை இந்தப் பாத்திரத்தைப் பற்றிய ஒரு நடிகருக்கான சிறந்த அவதானிப்பு எனலாம்.. ஆனால் பிற பாத்திரங்களில் வந்தவர்களின் நடிப்பு பிரக்ஞைபூர்வமாகவும் அதனால் சொதப்பலாகவும் இருந்தது. மகள் பாத்திரத்தில் வசுமதியாக நடித்தவர் ஷாந்தி கணேஷ். ‘பிதாமகனில் வில்லனுக்கு மனைவியாக வந்தவர்.அவர் நடிப்பு தான் உள்ளதிலேயே கடுமையான விஷப்பரீட்சையாக இருந்தது. எழுபதுகளில் பூர்ணம் விஸ்வநாதனுடன் இயங்கிய நடிகர் குழு தான் இம்முறையும் நடித்திருந்ததால் பாத்திர அமைப்புக்குப் பொருத்தமற்ற தோற்றம் ஒரு நெருடலாகவே இருந்தது. இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்தது அம்பியாக நடித்த சிறுவன் மட்டும்தான்.

name