About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Tuesday, June 8, 2010

வாங்க பாஸ் சுறா பிரிச்சு மேய்ஞ்சு தோரணமா தொங்கப்போடுவம்

சுறா போல வருமா..?
எல்லாரும் கிழித்துத் தொங்க விட்டாயிற்று.அதனால்,நாம் வேறு சிலவற்றைப் பார்ப்போம்.

தசாவதாரம் படத்தில் நெப்போலியன் - கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கும்போது பின் நிற்கும் வீரர்களில் ஒருவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தாராம். கடைசி நேரத்தில் கே.எஸ்.ஆர், மானிட்டரில் பார்த்து அதைக் கழட்டச் சொன்னாராம். சோழர் காலத்தில் மூக்குக் கண்ணாடி இல்லையாம். அந்தளவிற்கு ஹோம் ஒர்க் செய்து படத்தைச் செதுக்கி எடுக்கும் கே.எஸ்.ரவிக்குமார் பட்டறையிலிருந்து வந்தவர் எஸ்.பி.ராஜ்குமார். பயங்கரமான கோட்டை விட்டுள்ளார் காட்சியமைப்பில்.

கதையை விடுங்கள் அது கிடக்குது கழுதை. சப்பை மேட்டர். கலைஞர் டிவி நாளைய இயக்குனர் குறும்படங்களில் கூட அவ்வளவு அழகாக பேக் கிரவுண்ட் கவர் செய்து அழகாக காட்சியமைக்கும்போது,ஒரு மாஸ் ஹீரோவின் ஐம்பதாவது படம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும்..?!

விஜய் இன்ட்ரோ சீனுக்கு அடுத்த சீன். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பின்னிருக்கும் தினசரி, 06.01.2010 என்கிறது, சிறிது நேரம் கழித்து வரும் மார்க்கெட் சண்டைக்காட்சியின் பிண்ணனியில் ஈரம் 10 வது நாள் போஸ்டர். ஈரம் படம் செப்டம்பர் 2009 வெளியீடென நினைவு. ஒரு வேளை தலை நகராம் சென்னையின் ஏதாவது ஒரு மொக்கை தியேட்டரில் இரண்டாவது ரிலீஸ் ஆகியிருக்குமோ...! ரைட்டு விடு.

அடுத்து வருவோம். வடிவேலுவின் ”காமெடி” சீன் என படக்குழுவினர் சொல்லிக்கொள்ளும் ஒரு சீன். என்கவுண்டர் செய்ய வேண்டிய கொலையாளியை வடிவேலுவிடம் ஒப்படைத்து விட்டு செல்லும் கண்ணியமான இரு போலிஸார் நடித்த காட்சி.அந்தக் காட்சியின் பின்புல டீக் கடையில் ஜனவரி மாதக் காலண்டர் தொங்கும். மேலே சொன்ன காட்சியில் ஜனவரி 6. இங்கும் ஜனவரி மாதக் காலண்டர். லாஜிக் ஓகேவா..! சபாஷ் இயக்குனரே.

ஆனால், கீழே தொங்கும் டீக் கடையில் தொங்கும் ”தினகரன்” நாளிதழில் கொட்டை எழுத்துகளில் “தமிழகத்தில் இன்று தேர்தல்” என்றிருக்கும். ஒன்றை கவனிக்க வேண்டும். அது தினகரனில் மட்டுமே இருக்கும். பக்கத்தில் தொங்கும் தந்திப் பேப்பரிலேயோ மற்றவற்றிலோ இருக்காது. சன் டிவி படமென்பதால்,செய்திகளை “முந்தி”த் தரும் ”ஒரே” நாளிதழ் தினகரனாய் இருக்கலாம்..! ஓகே பாஸ். லூஸுல விடுங்க.

ஹேய்.எங்க போறீங்க..? இருங்க. இன்னும் முடியல.மேலே “தமிழகத்தில் இன்று தேர்தல்” என்ற மேட்டரைப் பார்த்தோமல்லவா..? வில்லனானவர் அமைச்சர் என்பதாக தகவல். அதுவும் கள்ள ஓட்டில் ஜெயித்த அமைச்சர். ங்கொய்யால..தேர்தல்ன்னா ஆளும் அமைச்சர் என்னய்யா பண்ணீட்டிருப்பார்..? அட அவர் மத்திய அமைச்சர்யா என்கிறீர்களா..? ஓ.கே கூல்.

அடுத்து கிளைமேக்ஸ். யுவராணி (சூப்பராக்கீறாங்கப்பா) மொபைலில் தன் கணவனான அமைச்சரிடம் சொல்வார். “என்னங்க இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வரப்போகுதுங்க..இங்க நிறைய ஓட்டு இருக்கு. அதான்..!” என்று.”அட அது இடைத் தேர்தலா இருக்கும்ய்யா..! ”என்கிறீகளோ. போலாம் ரை..ரைட்.

முடிவாக கதைப்படி,சுறா எனும் இளைஞன் வெறும் இருபதே இருபது நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளைக் கட்டி முடிக்கிறார்.உலகின் எந்தவொரு கொத்தனாராலும் சிவில் இஞ்சினியராலும் செய்ய முடியாத ங்கொக்காமக்கா சாதனையிது.

ஆளானப்பட்ட கேப்டன். விஜயகாந்த் அவர்களே எப்பேர்ப்பட்ட டைம்பாமையும் 0.02 செகண்ட்ஸில்தான் நிறுத்துவார். நண்பர் விஜய் அவர்கள் 0.00 செகண்ட்ஸ்தான். வேறென்ன சொல்ல..? அடுத்த ரஜினி!!!

ம்ம்..எம்.எஸ்.பிரபு அவர்கள் டீமில் நீடித்திருந்தால், விஜய்க்கும் ஒரு ”அயன்” கிடைத்திருக்கலாம். துரதிர்ஷ்டமா துரோகமா தெரியவில்லை.

எப்படி தன் 50 வது படத்தை இவ்வளவு கேவலமான ஒரு மொக்கையாக எடுக்க தளபதி, சம்மதிருப்பார் என்பது மட்டுமே எனக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.என்னுடன் படம் பார்தோரில் பலர் சொன்னது “வேட்டைக்காரன் எவ்வளவோ தேவல” என்பது. ஒருவேளை அடுத்த விஜய் படம் வெளியாகும் போது, சுறா சூப்பர் ஹிட்டாகலாம்.

ஏண்டா மக்கா,விஜய் படத்துல போயி இம்புட்டு லாஜிக் பாக்குறீயே..! வெளங்குவியால்ல நீ.? என்கிறீர்களா..!என்ன பண்றது..? அது Manufacturing Defect. ஒன்னியும் பண்ண முடியாதுங்ணா.

இயக்குனரைப் பார்த்தால்,நான் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். “ஏன் பாஸ், எங்கள மாதிரி தமிழ் ரசிகர்களையெல்லாம் கேணைப் புண்ணாக்குன்னு நினைச்சீங்களா..?!”

No comments:

Post a Comment

name